அழகுக்கு ஏத்த மாதிரி ரேட்டு! மசாஜ் சென்டர் மஜாவாக நடந்த விபச்சாரம்.. உள்ளே புகுந்த போலீஸ்..!
ஐதராபாத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் மஜாவாக பாலியல் தொழில் நடத்தி கல்லா கட்டி வந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Massage Center
தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் புற்றீசல் போல் மசாஜ் சென்டர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதும் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01ee7jxgxzme0sw1he9kshjcha/woman-raped-by-15-man-4-jpg_300x175xt.jpg)
prostitution
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள குடிமல்காபூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடியிருப்பு ஒன்றில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். பின்னர், பாலியல் தொழில் நடப்பது உறுதியானதை அடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டருக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
hyderabad prostitution
அப்போது 5 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மீட்கப்பட்ட 5 பெண்களும் காப்பாகத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அந்த ஆண் நபரை மட்டும் போலீசார் கைது செய்தனர்.
Police Arrest
மசாஜ் சென்டர்கள், ஸ்பா ஆகியவை எங்காவது இருந்தால் அந்த கட்டிடங்களின் உரிமையாளர்கள் அவற்றை உடனடியாக காலி செய்ய வைக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர். தவறினால் கட்டிட உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.