'கோலி சோடா' படத்தில் நடித்த சோடா புட்டி சீதாவா இது! ஆளை மயக்கும் அழகு தேவதையாக மாறிய ரீசென்ட் போட்டோஸ் இதோ!
'கோலி சோடா' படத்தில் சோடாபுட்டி கண்ணாடியோடு வந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை சீதா. இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் அழகாக இருந்தால் மட்டும் வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை, கூடவே கொஞ்சம் அதிஷ்டமும் இருக்க வேண்டும். அதிலும் சமீப காலமாக, யார் யார் எப்போது சினிமாவில் நடிப்பார்கள் என்பதை யூகித்து கூட பார்க்க முடியவில்லை. கையில் செல்போன் வைத்து கொண்டு, யூடியூப்பில் சேனலில் வாயிக்கு வந்ததையெல்லாம் பேசி வீடியோ போட்டு வாய்ப்பு தேட துவங்கி படங்களிலும் நடித்து விடுகின்றனர்.
ஆனால் ஒரு சிலருக்கு அதிஷ்டம் அவர்களை தேடி செல்லும், அந்த வகையில் ரோட்டில் போய் கொண்டிருக்கும் போது, சினிமா வாய்ப்பை பெற்றவர் தான் 'கோலி சோடா' பட நடிகை சீதா.
இயக்குனர் விஜய் மில்டன் சீதாவின் கதாபாத்திரத்திற்கு பல பேருக்கு ஆடிஷன் நடத்தியும், யாரும் அவருக்கு திருப்திகரமாக இல்லையாம். தற்செயலாக ரோட்டில் சென்று கொண்டிருந்த சீதாவைப் பார்த்ததும், அந்த கேரக்டருக்கு இந்த பொண்ணு செட் ஆவர் என தோன்றியுள்ளது. எனவே சீதாவின் தோழி ஒருவர் மூலம், அவரை அணுகி நடிக்க சம்மதம் வாங்கி நடிக்க வைத்துள்ளார். இந்த படமும் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்மில்டன் நடிகர் விக்ரம், சமந்தாவை வைத்து இயக்கிய ‘பத்து என்றதுக்குள்ள‘, பிரபுதேவா - நிக்கி கல்ராணி நடித்த சார்லின் சாப்ளின் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். இவர் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்த நிலையில், அந்த படம் வெளியாகவில்லை.
தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் சீதா, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்... விதவிதமான ரீல்ஸ், மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக 'கோலி சோடா' படத்தில் சோடாபுட்டியாக பார்த்த, சீதாவா இது என அனைவரும் ஆச்சயப்படும் விதத்தில் இவரின் தோற்றம் உள்ளது. காரணம் ஆளையே மயக்கும் அழகு தேவதை போல் உள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.