தூங்க கூட விடமாட்டா.. வயிற்றுக்குள் குழந்தை செய்த சேட்டை! தினமும் பிரசன்னா இதை செய்வார்.. சினேகா பகிர்த தகவல்!
நடிகை சினேகா, தன்னுடைய கர்ப்பகால அனுபவம் குறித்த தகவலை 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில், நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்த 'என்னவளே' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சினேகா. முதல் படத்திலேயே தன்னுடைய அழகிய புன்னகையால் ரசிகர்களை கவர்ந்த இவர், இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ஆனந்தம் திரைப்படத்திலும் அபாஸுக்கு ஜோடியாக நடித்தார்.
இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், சினேகாவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது. இதை தொடர்ந்து, விஜய், அஜித், தனுஷ், கமல்ஹாசன், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட சினேகா, முன்னணி நடிகையாக இருந்த போது சில காதல் கிசுகிசுவிலும் சிக்கி மீண்டார்.
Sneha
குறிப்பாக தொழிலதிபர் ஒருவருடன், இவருக்கு நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில்... கடைசி நேரத்தில் திருமணம் நின்றது. வாழ்க்கையில் பல சவாலான சூழ்நிலைகள் வந்தாலும்... நடிப்பை கெட்டியாக பிடித்து கொண்ட சினேகா, 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்கிற படத்தில், பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
பின்னர் இந்த காதலை பெற்றோரிடம் கூறி, திருமணம் வரை கொண்டு சென்ற இந்த ஜோடி... 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் கவனம் செலுத்தினாலும் தன்னுடைய குழந்தைகள் பிறந்த பின்னர் தற்காலிகமாக திரையுலகில் இருந்து விலகினார். மேலும் தன்னுடைய குழந்தைகள் வளர்ந்து விட்டதால், சின்னத்திரையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்கிற நிகழ்ச்சியில் நடுவராக இருப்பதோடு, வெள்ளித்திரையில் விஜய்யுடன் 'கோட்' என்கிற படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில்... சினேகா முதல் முறையாக தன்னுடைய கர்ப்பகால அனுபவம் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து பேசுகையில்... 'வயிற்றுக்குள் குழந்தை உருளுவது தான் மிகவும் பெஸ்ட்டான பீல். குழந்தை வெளியே வந்த பிறகு அதை நான் மிஸ் பண்ண ஆரமிச்சேன். விஹான் கொஞ்சம் அமைதியாக இருந்தான், தன்னுடைய மகள் மிகவும் நாட்டி சைல்டு, எப்பப்பார்த்தாலும் உதைத்துக்கொண்டே இருப்பாள். தூங்கும்போது கூட தூங்க விட மாட்டாள். ஆனால் அவள் வெளியே வந்த பிறகு நான் அதை மிஸ் பண்ணினேன். 5-ஆவது மாதத்தில் இருந்து 9-ஆவது மாதம் வரைக்கும் இருந்த பீல் இல்லையே என்றும்... அது ஒரு அழகனை அனுபவம் என தெரிவித்துள்ளார்.
அதே போல் 9-ஆவது மாதத்தில், எப்படியாவது குழந்தை வெளியில் வந்தால் போதும் என்று தான் தாய்மார்கள் நினைப்பார்கள், எனக்கு இந்த பீல் மிஸ் பண்ணி விடுவேன் என்று தான் தோன்றியது என கூறியுள்ளார். பின்னர் தன்னுடைய கணவர் பிரசன்னா பற்றி கூறுகையில், அவர் ஒரு நாள் கூட மிஸ் பண்ணாமல் தனக்கு அவகேடோ ஜூஸ் போட்டு தருவார் என தன்னுடைய கர்ப்பகால அனுபவத்தை பகிர்துகொண்டுள்ளார்.