Anirudh : பாலிவுட் திரையுகை இசையால் அசர வைத்த அனிருத்! முதல் இந்தி படத்திற்கே கிடைத்த மிக உயரிய விருது!
இசையமைப்பாளர் அனிருத், தன்னுடைய முதல் பாலிவுட் திரைப்படமான 'ஜவான்' படத்தில் இசையமைத்ததற்காக, சிறந்த இசையமைப்பாளருக்கான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார்.
Atlee
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான அட்லீ, நடிகர் ஆர்யா, ஜெய், நயந்தாரா, நஸ்ரியா ஆகியோரை வைத்து இயக்கிய திரைப்படம் 'ராஜா ராணி'. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, பிரபு தேவாவின் காதல் தோல்வியால் வாடிய நயன்தாராவுக்கு சிறந்த கம் பேக் மூவியாகவும் அமைந்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தளபதி விஜய்யை வைத்து.. தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கி ஹார்டிக் வெற்றியை கொடுத்தார். இப்படங்கள் சில விமர்சனங்களுக்கு ஆளான போதிலும், வசூலில் மிரட்டியது. இதை தொடர்ந்து திடீர் என கோலிவுட் திரையுலகில் இருந்து பாலிவுட் திரையுலகிற்கு தாவிய அட்லீ, ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளதை உறுதி செய்தார்.
ஷாருக்கான் பதான் படப்பிடிப்பு மற்றும் தன்னுடைய மகன் ஆரியனின் போதை பொருள் வழக்கு போன்ற விஷயங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி கொண்டே சென்ற நிலையில்... ஒரு வழியாக 2 வருடங்களுக்கு மேல் காத்திருந்து, 'ஜவான்' படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்தார். இப்படம் வெளியாகி 1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
Anirudh
மேலும் இந்த படத்தின் மூலம் அட்லீ, நயன்தாராவை பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியதோடு, அனிருத்தையும் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார்.
இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இதில் இயக்குனர் அட்லீ இயக்கிய ஜவான் படத்திற்கு மட்டும் 4 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கானுக்கும், நடிகைக்கான விருது நயன்தாராவுக்கும், இசையமைப்பாளருக்கான விருது அனிருத்துக்கு, இயக்குனருக்கான விருது அட்லீக்கும் கிடைத்துள்ளது.
Rockstar Anirudh
இவர்கள் அனைவருக்குமே தற்போது வாழ்த்துக்கள் ஒரு புறம் குவிந்து வரும் நிலையில்... கோலிவுட் ரசிகர்களை தன்னுடைய துள்ளலான இசையால் ஆட வைத்த, அனிரூத் பாலிவுட் திரையுலகிலும் ஆட்டத்தை துவங்கி விட்டார் என அவரது ரசிகர்கள், சமூக வலைத்தளத்தில் விதவிதமாக போஸ்ட் போட்டு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.