நடிகைகள் எல்லாம் விபச்சாரிகளா? இந்த விஷயம் தான் எனக்கு ரொம்ப வலிக்குது! பிரபல நடிகைக்கு ஆதரவாக சீரிய கஸ்தூரி!
பிரபல நடிகை குறித்து அவதூறு பரப்பும் வகையில் முன்னால் அதிமுக ஒன்றிய செயலாளர் பேசியதை வன்மையாக கண்டித்து நடிகை கஸ்தூரி பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கஸ்தூரி பேசுகையில்... "இன்றைக்கு என் மனதை ரொம்ப உறுத்துற... வேதனை படுத்துகின்ற ஒரு விஷயத்தை பேச போகிறேன். சமீப காலமாக சினிமா நடிகைகளை, ரொம்ப கொச்சையாக அவதூறாக பேசும் போக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவங்க.. அவங்க.. வந்து, வாய்க்கு வந்தபடி பேசிட்டு போயிடுறாங்க, அதுல கொஞ்சம் கூட உண்மையே இல்லை என்றாலும், இதில் துணி கூட உண்மை இல்லை என்று.. நாட்டுக்கு பறைசாற்றும் வகையில் யாரும் இல்லை.
அவங்கவங்களுக்கு வாய் இருக்கு, நாக்கு இருக்கு, என்று பேசிவிடுறாங்க. அதில் உண்மை இல்லை, என்று நிரூபிக்கும் இடத்தில் யாரும் இல்லை. இப்போதுதான் மன்சூர் அலி கானின் பிரச்சனை கொஞ்சம் ஒஞ்சி இருக்கு. இதைத்தொடர்ந்து மீண்டும் குறிப்பிட்ட நடிகையைப் பற்றி, ரொம்ப ரொம்ப கேவலமா அதிமுக ஒன்றிய செயலாளர் இன்டர்வியூ கொடுத்து, வீடியோ வெளியிட்டு இருக்கார்.
அவருக்கு, அவருடைய கட்சித் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி, பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம். இதுல இவர் பார்க்காத ஒரு விஷயத்தை, இவருக்கு முழுசாக தெரியாத ஒரு விஷயத்தை, ரொம்ப தெரிஞ்ச மாதிரி அவர் சொல்லி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இவன் கேட்டான்... அவன் கேட்டான்.. என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதே போல் ஆதாரம் இல்லாமல் பேசுகிறேன் என்பதை அவரே கூறி விட்டார்.
என்னமோ சினிமாவில் இருக்கிறவங்க எல்லாருமே விபச்சாரிகள் மாதிரியும், சினிமாவில் இருக்கும் நடிகர்கள் எல்லாருமே மாமா வேலை பார்க்கிற மாதிரியும் கூறியிருக்கிறார். எப்போதுமே ஒரு பொது தன்மையுடன் பேசுங்கள். ஒரு குறிப்பிட்ட நடிகையை, பெயர் சொல்லி பேசுகிறார். இதைத் தொடர்ந்து அரசியலில் இருக்கும் ஒரு நடிகரை பற்றியும் பேசி இருக்கிறார். எல்லா நடிகைகளும் வந்தாங்க என்று பேசி இருக்கிறார். இப்படி ஒரு பொது புத்தியோடு பேச உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்.
நடிகைகள் விபச்சாரிகள் போலவும், நடிகர்கள் மாமா வேலை செய்பவர்கள் போலவும் உங்களுக்கு பேச யார் அதிகாரம் கொடுத்தது. எங்களைப் போன்ற நேர்மையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, பொது வாழ்க்கையிலும் இருக்கணும் என்கிற எத்தனையோ பேருக்கு இது ஒரு பின்னடைவு. நூறு ஆண்டுகளுக்கு மேல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த பெண்கள், இப்போது தான் சில பத்தாண்டுகளாக வெளியே வந்து பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். வேலை செய்யும் செய்யும் இடத்தில் பாலியல் அச்சுறுத்தல்களை தாண்டி தங்களுடைய வாழ்க்கையில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நாங்கள் என்றைக்கு சினிமாவில் நடிக்க வருகின்றோமோ... அப்போதே எங்கள் மீது ஒரு முத்திரை குத்தி விடுகிறார்கள். இது எல்லாத்தையும் சகித்துக் கொண்டுதான் சினிமா தொழிலை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். நடிகைகள் பற்றி இப்படி அவதூறாக பேசியதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். அதேபோல் நடிகைகள் அரசியலுக்கு வருவது, இங்கொன்றும் அங்கு ஒன்றாக இருந்தது. இப்போதுதான் அரசியலிலும் வர தொடங்கியுள்ளனர். நடிகை தானே இவங்களுக்கு என்ன பேச தெரியும்? என்று எத்தனையோ பேர் பேசி உள்ளனர். இப்படி பட்ட பேச்சுகளுக்கு நாளே ஆளாகி உள்ளேன் என கூறியுள்ளார்.
Anjali Menon: KRG ஸ்டுடியோஸுடன் இணைந்து... தமிழில் கால் பதிக்கும் இயக்குனர் அஞ்சலி மேனன்!
தொடர்ந்து பேசிய கஸ்தூரி, என்னுடைய சக நடிகைகள்.. என்னை மாதிரி சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காமல் இருக்கலாம். அவங்க எல்லாம் அறிவே இல்லாத முட்டாள்கள் இல்லை. அவங்களும் மனிதர்கள் தான். அவங்களுக்கு ஒரு உள்ளம் இருக்கு, அவங்களுக்கும் ஒரு சுயமரியாதை இருக்கு. அவங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. இதையெல்லாம் கண்டு கொள்ளலாம் வாய்க்கு வந்தபடி பெயர் சொல்லி, இத்தனை லட்சம் கொடுத்தாங்க என்று பேசியிருக்கிறார். ஆனால் இதை அவர் பார்க்கல, தனக்கு தெரியாது என கூறியிருக்கிறார்.
இதில் என்ன தெரியுமா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு? ஒரு பெண்ணாகவும், நடிகையாகவும், தமிழ்நாடு போற்றும் ஒரு தலைவியாக உருவெடுத்த புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா, அவர்களுடைய கட்சியிலிருந்து நீங்கள் இப்படி நடிகைகளையும் பெண்களையும் இழிவு படுத்துறது எந்த கணக்குல வரும்னு தெரியல. இதை நினைக்கும் போது எனக்கு நெஞ்சு வலிக்குது.
Trisha React AV Raju Speech :தன்னை பற்றிய சர்ச்சை பேச்சுக்கு.. தரமான பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!
actor kasthuri
இந்த விஷயத்தில் பாதிக்க பட்டவர்கள் நடிகையும் - நடிகரும் கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தேசிய மகளிர் ஆணையத்தில் இருக்கும், நடிகை குஷ்பூ இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். அதே போல் தமிழக அரசும், நீதி துறையும் தன்னிச்சையாக முன் வந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.