பொம்பளைங்க விஷயத்தில் படு வீக்!காலையில் ஒரு பெண்... இரவு ஒரு பெண்! இசையமைப்பாளரின் லட்சணத்தை கூறிய பயில்வான்!
பிரபல இசையமைப்பாளர் குறித்து, பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் மோசமான வகையில் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Bayilvan Ranganathan
திரையுலகை பொருத்தவரை, சர்ச்சைகளுக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், குறித்து எந்த ஒரு அவதூறு மற்றும் சீக்ரெட் விஷயங்கள் வெளியானால் அது சமூக வலைதளத்தில் காட்டு தீ போல் பரவி விடுகிறது.
dheena
அந்த வகையில், பிரபல இசையமைப்பாளர் தீனா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த இசைக்கலைஞர்கள் தேர்தலில், ஏற்கனவே இரண்டு முறை தலைவராக இருந்த தீனா... சங்க விதிகளை மீறும் விதத்தில் மூன்றாவது முறையாக போட்டியிட்டார். இவரின் இந்த முடிவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா, கங்கை அமரன், உள்ளிட்ட பலர் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்.
ilayaraja
அதேபோல் தீனாவை எதிர்த்து போட்டியிட்ட இசை தென்றல் தேவாவின் தம்பியும், இசையமைப்பாளருமான சபேசன் கடந்த ஆண்டு நடைபெற இருந்த தேர்தல் நடைபெற கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இடைக்கால தடை போட வைத்தார். இந்நிலையில் அண்மையில் நடந்த இசைக்கலைஞர்கள் தேர்தலில் தீனாவை எதிர்த்து போட்டியிட்ட சபேசன் 70 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தீனா படுதோல்வில் அடைந்தார். தற்போது இது குறித்தும், தீனாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
Music Director Ilayaraja
அதாவது ஏற்கனவே தீனா சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறார் என்றும், சங்க கட்டிடம் கட்ட இளையராஜா மிகப்பெரிய தொகை கொடுப்பதாக இருந்தார். ஆனால் தீனாவின் செய்கைகள் சரியில்லாததால் அதை அவர் கொடுக்கவில்லை. கங்கை அமரன் கூட தீனாவை காரி துப்பும் அளவுக்கு பேசியிருக்கிறார். காரணம் அவரின் தில்லு முல்லு வேலைகள் தான்.
Trisha React AV Raju Speech :தன்னை பற்றிய சர்ச்சை பேச்சுக்கு.. தரமான பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!
சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் தீனா மிகவும் மோசமானவர். அவரிடம் வீணை வாசிக்க வந்த பெண்ணை மடக்கி திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். ஆனால் தீனாவின் செய்கைகள் பிடிக்காதுதால் அந்தப் பெண் அவரை விட்டு விலகி விட்டார். அதைத்தொடர்ந்து தன்னிடம் வாய்ப்பு கேட்க வந்த இஸ்லாமிய பெண் ஒருவரை மடக்கி தன்னுடன் வைத்து கொண்டார். காலையில் ஒரு பெண்... இரவில் ஒரு பெண்... என வாழ்ந்து வருபவர் தீனா. பொம்பளைங்க விஷயத்தில் மிகவும் மோசமானவர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.