Vichithra: விசித்ராவின் திரை வாழ்க்கைக்கு ஆப்பு வைத்ததே சத்யராஜ் தானா? விச்சு போட்ட பழைய பதிவு வைரல்!
90களில் பல தமிழ் படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து பிரபலமானவர் விசித்ரா. இவர் நடிகர் சத்யராஜ் குறித்து போட்ட பழைய பதிவு, தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் திரையுலகில் நேர்த்தியான கவர்ச்சி வேடங்களை தேர்வு செய்து நடித்து பிரபலமானவர் நடிகை விசித்ரா. 1991 ஆம் ஆண்டு 'பொற்கொடி' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விசித்ரா, இதைத்தொடர்ந்து அவள் ஒரு வசந்தம், சின்ன தாயே, தலைவாசல், தேவர் மகன், அமராவதி, சபாஷ் பாபு, ரசிகன், ராவணன், வீரா, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள விசித்ரா... கோகிலா எங்கே போகிறாள், வாழ்க்கை, ராசாத்தி, ஆனந்தி, கல்யாணி, போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் கூட ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், பின்னர் அந்த சீரியலை விட்டு விலகினார்.
திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்ட பின்னர், திரை உலகில் மீண்டும் கவனம் செலுத்த துவங்கியதும்... வெள்ளித்திரை வாய்ப்புகளை தேடாமல், மக்கள் மனதை கவரும் விதமான சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றார் விசித்ரா. அந்த வகையில், குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, பைனல் வரை வந்த நிலையில்... டைட்டிலை வெல்ல முடியாமல் போனது.
இதை தொடர்ந்து, தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 50 வயதிலும் இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து விளையாடி வருகிறார். இவர் நேர்மையாக விளையாடுவதும், தன் மனதில் பட்ட கருத்தை நேரடியாக கூறுவதும், இவருக்கு பல ரசிகர்களை பெற்று கொண்டுள்ளது. கண்டிப்பாக பைனலிஸ்ட் போட்டியாளர்களில் இவரும் ஒருவராக இருப்பார் என அடித்து கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், விசித்ரா பற்றிய பல தகவல்கள் அதிகம் பேசப்படும் நிலையில்... சத்யராஜ் தான் விசித்ராவின் வீழ்ச்சிக்கு காரணம் என, கடந்த சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தில் ஒருவர் போட்டிருந்த பதிவில், 'தமிழில் முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியவர் விசித்ரா. சத்யராஜால் தான் அனைத்தும் பாழாகி விட்டது என்பது போல் கூறி இருந்தார்.
இதற்கு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரிப்ளை செய்த விசித்ரா... அந்த காலகட்டத்தில் தனக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரம் மட்டுமே கிடைத்ததாகவும், அதனால் மற்ற வேடங்களில் தன்னால் நடிக்க முடியாமல் போனது. சத்யராஜ் சார் என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் இயக்கிய முதல் படமான 'வில்லாதி வில்லன்' படத்தில் தனக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்தார் என கூறி பதிலடி கொடுத்திருந்தார். இவருடைய இந்த பழைய பதிவு சமூக வலைதளத்தில் மீண்டும் பார்க்கப்பட்டு வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D