Archana: பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா 50 லட்சம் பரிசு தொகையுடன்.. வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
'பிக்பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றுள்ள அர்ச்சனா, 50 லட்சம் பரிசுத்தொகையுடன் சேர்த்து வாங்க உள்ள, சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்ய பட்டதற்கு பின்னர், கடந்த 4 சீசன்களாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து ஆண் போட்டியாளர்களே டைட்டில் வின்னராக இருந்து வருகிறார்கள். எனவே இந்த முறையாவது, பெண் போட்டியாளர் யாரேனும் டைட்டிலை தட்டிச் செல்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.
அந்த வகையில் இந்த முறை, வைல்ட் கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவருடைய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் ஒன்றாம் தேதி விஜய் டிவி தொலைக்காட்சியில் துவங்கியது. கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சிக்கு, உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளனர். 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், விசித்ரா, பவா செல்லதுரை, பூர்ணிமா ரவி, மணி சந்திரா, விஷ்ணு, ஐஷு, ரவீனா, அக்ஷயா, யுகேந்திரன், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ஜோவிகா விஜயகுமார், சரவணன் விக்ரம், விஜய் வர்மா, நிக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
BB Tamil 7
யாரும் எதிர்பாராத வகையில் முதல் வாரமே ஏவிக்ஷான் ப்ராசஸ் துவங்கிய நிலையில், முதல் போட்டியாளராக அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து பவா செல்லதுரை, உடல் நலன் பிரச்சனை காரணமாக விலகுவதாக அறிவித்தார். பின்னர் அடுத்தடுத்தது போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி வந்த நிலையில், 28 வது நாளில் அதிரடியாக இரண்டு எவிக்சன் நடந்தது மட்டுமின்றி, 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.
வைல்ட் கார்டு மூலம் உள்ளே நுழைந்த அர்ச்சனா, தினேஷ், அன்னபாரதி, பிராவோ, கானா பாலா, ஆகியோர் மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வந்தாலும்... அன்ன பாரதி வந்த முதல் வாரத்திலேயே வெளியேறினார். இவரை தொடர்ந்து கானா பாலா, பிராவோ ஆகியோரும் சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் அர்ச்சனா மற்றும் தினேஷ் இருவரும் ரசிகர்களின் கவனத்தை முதல் வாரமே ஈரத்தால், மிகவும் வலிமையான போட்டியாளராக ஃபைனல் வரை முன்னேறினர். அதே போல் இந்த முறை ஃபைனலில், முதல் நாள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மாயா, விஷ்ணு, மணி சந்திரா, ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களில் யார் டைட்டிலை தட்டிச் செல்வார் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி அர்ச்சனா தான் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தின் அடிப்படையில் டைட்டிலை வென்றுள்ளதாகவும், முதல் ரன்னரப்பாக மணிச்சந்திராவும், இரண்டாவது ரன்னரப்பாக மாயாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
BB Tamil 7
டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ள அர்ச்சனாவுக்கு, பரிசுத்தொகை 50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதுடன்... இன்னும் சில சிறப்பு பரிசுகளும் வாரி வழங்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி, சுமார் 77 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அர்ச்சனா, ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்று வந்த நிலையில்... தற்போது 15 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.