Mid Week Eviction: செம்ம ட்விஸ்ட்! திடீர் என நடந்த மிட் வீக் எவிக்ஷன்.. வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்!
பிக்பாஸ் ஃபைனலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது மிட் வீக் எவிக்ஷன் நடத்தப்பட்டு... முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி... இந்த வாரத்துடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், டிக்கெட் டூ பினாலே நிகழ்ச்சியில் வெற்றி பெற்று முதல் ஆளாக விஷ்ணு பைனலுக்குள் நுழைந்தார். இதை தொடர்ந்து ஃபைனலில் கட்டாயம் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விச்சு எதிர்பாராத விதமாக கடந்த வாரம் வெளியேறினார்.
இவரது வெளியேற்றம் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ஒரு சில கடந்த இரண்டு வாரமாகவே விசித்ரா மிகவும் திமிராகவும், மற்றவர்கள் பர்சனல் வாழ்க்கையை சாடி பேசியதும் பின்தான் இந்த வெளியேற்றத்திற்கு காரணம் என கூறினார். விசித்ரா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதால் தற்போது, மாயா, அர்ச்சனா, தினேஷ், விஜய் வர்மா, மணிச்சந்திரா, ஆகிய 5 பேர் உள்ளனர்.
இவர்களில் இருந்து நான்கு பேர் மட்டுமே ஃபைனலுக்குள் நுழைவார்கள் என்பதால் அந்த 4 பேர் யார்... இவர்களில் டைட்டில் வின்னராகி ரூ.50 லட்சத்தை தட்டிச் செல்ல உள்ளது யார்? என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள தகவலின் படி, பூகம்பம் டாஸ்க் மூலம் உள்ளே வசந்த விஜய் வர்மா மிட் வீக் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக சில நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் ஃபைனலுக்குள்.. விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா, மாயா , மற்றும் மணிச்சந்திரா ஆகியோர் இறுதி போட்டியில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. மேலும் நிகழ்ச்சி முடிவுக்கு வர இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ளதால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர துவங்கியுள்ளனர். எனினும் ஃபைனலில் யார் வெற்றியாராக அறிவிக்கப்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.