அண்ணா சீரியல் : சாமி ஆடி... தர்மகர்த்தா ஆக துடிக்கும் செளந்தரபாண்டியின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட பரணி
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி கனி சொன்ன விஷயத்தை கேட்டு கோபமாக கோவிலுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Anna Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி கனி சொன்ன விஷயத்தை கேட்டு கோபமாக கோவிலுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hyn05e9wzcg1rbge5yegy0sk/whatsapp-image-2024-05-24-at-10-16-17_300x172xt.jpg)
Zee Tamil Anna Serial
அதாவது, சௌந்தரபாண்டி ஏற்கனேவே கோவிந்தனை வைத்து எதோ திட்டத்தை தீட்டி வைத்திருக்க, இங்கு வந்த பரணி திடீரென சாமி வந்தது போல் ஆடுகிறாள். கோவிந்தனை பார்த்து நீ இன்னைக்கு குடிக்க காசு தரலனு உன் பொண்டாட்டி காதை அறுத்துட்டு தானே வந்த என்று சொல்ல கோவிந்தன் என் வீட்டில நடந்ததை அப்படியே சொல்றியே மா என்று காலில் விழுந்து சரணடைகிறேன்.
இதையும் படியுங்கள்... Shruti haasan : மிங்கிளாக ரெடி... ரிலேஷன்ஷிப் பற்றிய கேள்விக்கு நடிகை ஸ்ருதிஹாசன் சொன்ன ‘நச்’ பதில்
Anna Serial Update
இதனை தொடர்ந்து பரணி சௌந்தரபாண்டியை பார்த்து நீ நிறைய பாவம் பண்ணி இருக்க, உனக்கான அழிவு காலம் தொடங்கிருச்சு, நடக்க போற தர்மகத்தா தேர்தலில் உன்னை தோற்கடித்து எனக்கு தேவையானதை நானே உன்கிட்ட இருந்து எடுத்துக்குவேன் என்று சொல்ல, சௌந்தரபாண்டி மிரண்டு போய் நிற்கிறார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த ஷண்முகம் குடும்பத்தினர் பரணிக்கு சாமி வந்தது பற்றி பேச, பரணி இன்னைக்கு சொன்னது எல்லாம் அப்படியே நடக்கணும், அப்பாவை தர்மகத்தா தேர்தலில் ஜெயிக்க விட கூடாது என்று சொல்கிறாள்,
Anna Serial Today Episode
மறுபக்கம் சௌந்தரபாண்டி சண்முகத்தை ஊரை விட்டே துரத்த முடிவெடுக்கிறார். கந்து வட்டி காரனிடம் பணத்தை கொடுத்து வாங்கிய ஷண்முகம் வீட்டு பத்திரத்தை எடுத்து கொண்டு ஷண்முகம் வீட்டிற்கு வர, அவரை பார்த்து எல்லாரும் ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... விஜய் டிவி டிஆர்பி-க்கு ஆப்பு வைக்க... மற்றுமொரு பாக்கியலட்சுமி சீரியலை களமிறக்கும் ஜீ தமிழ்