பொண்ணா இருந்தா இங்க படம் தர மாட்டாங்க... கோலிவுட்டில் உள்ள அரசியலை தோலுரித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தான் பட்ட கஷ்டங்கள் பற்றி மேடையில் ஓப்பனாக பேசி இருக்கிறார்.
லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா, அவருடைய பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் கலந்துகொண்டனர். இதுதவிர இயக்குனர்கள் நெல்சன், கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்ட பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதில் லால் சலாம் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய தந்தை பற்றியும், சினிமாவில் தான் சந்திக்கும் சவால்கள் பற்றியும் மனம்திறந்து பேசினார்.
அவர் பேசியதாவது : “35 ஆண்டுகளாக நடித்து தனக்கென ஒரு பெயரை என் தந்தை சம்பாத்தித்து வைத்திருக்கிறார். அந்த பெயருக்கு கலங்கம் விளைவிக்க எந்த ஒரு மகளும் உரிமை இல்லை. கதை பிடித்ததால் தான் லால் சலாம் படத்தில் அவர் நடிக்க ஒத்துக் கொண்டார். லால் சலாம் டீம் ஒரு லகான் டீம் மாதிரி. இங்க எழுத்தாளர தெரியாது. எடிட்டர தெரியாது. என்னை தெரியும் ஆனா தெரியாது. இப்படி ஒரு டீமை நம்பி ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ரஜினிகாந்த் இந்த படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய வரம்.
இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா என்னுடைய 2-வது தாய்... தன்னுடைய சிங்கப்பெண்கள் பற்றி பேசி கண்கலங்கிய ரஜினிகாந்த்
பொண்ணா இருந்தா இங்க படம் தர மாட்டாங்க. பெரிய ஆளா இருந்தாலும் படம் தர மாட்டாங்க. புது ஆளுக்கு கூட தருவாங்க ஆனா எங்களுக்கு படம் தர மாட்டாங்க. அது இங்க இருக்குறவங்களுக்கு தான் தெரியும். என்னுடைய குழந்தைகள் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 2 வருஷங்கள் பணியாற்றியபோது அவர்களுடன் நான் பெரியளவில் நேரம் செலவிட முடியவில்லை. அவர்களின் பள்ளியில் நடந்த மீட்டிங்கில் கூட கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
பொண்ணுக்கு ஒரு கஷ்டம் என்றால் அப்பா பணம் கொடுக்கலாம், கூட இருக்கலாம், ஆனா இவர் எனக்கு படம் கொடுத்திருக்காரு. அவர் இதை பண்ணனும்னு அவசியம் இல்ல. மற்றொரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். இந்த படத்தின் கதைக்காக மட்டுமே இதில் அப்பா நடிக்க சம்மதித்தார். என் அப்பா சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால் அவர் இப்படத்தில் நடிக்க சம்மதித்திருக்க மாட்டார். மனிதநேயம் கொண்ட மனிதரால் மட்டுமே இப்படத்தில் நடிக்க முடியும்” என அனல்பறக்க பேசி உள்ளார் ஐஸ்வர்யா.
இதையும் படியுங்கள்... நான் சொன்ன காக்கா விஜய் அல்ல... சும்மா சில்லு சில்லுனு பேசி சர்ச்சைகளுக்கு சவுக்கடி கொடுத்த ரஜினிகாந்த்