ஜெயலலிதா தான் நீலாம்பரியா... தெருவுல நடமாட முடியாது பாத்துக்கோங்க - கே.எஸ்.ரவிக்குமாரை எச்சரித்த ஜெயக்குமார்
படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கேரக்டர் ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதியதாக கூறிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
KS Ravikumar, jayakumar
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் படையப்பா. இப்படத்தில் ரஜினியின் நடிப்பையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கேரக்டர் அமைந்திருக்கும். அப்படத்தின் வெற்றிக்கு அந்த கேரக்டரும் ஒரு முக்கிய காரணம். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஜெயலலிதாவை மனதில் வைத்து தான் நீலாம்பரி கேரக்டரை உருவாக்கினேன் என கூறி இருந்தார்.
padayappa
அவரின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது : “அம்மாவுடைய நல்ல குணம் அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தான் தெரியும். அப்படிப்பட்ட குணம் கொண்டவராக இருப்பதால் தான் அவர் இறந்த பின்பும் அவரை உலகமே போற்றுகிறது. அப்படிப்பட்டவரை நீலாம்பரி கேரக்டரோடு ஒப்பிட்டு பேசலாமா.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ramya krishnan, jayalalitha
மறைந்த ஒரு முதலமைச்சரை இப்போ மீண்டும் இழுக்க வேண்டிய அவசியம் என்ன?. உண்மையிலேயே நீங்கள் வீரனாக இருந்தால் படம் ரிலீஸ் ஆன டைம்லயே அம்மா உயிரோடு இருக்கும்போதே சொல்லியிருக்கனும். அப்போ சொல்லியிருந்தால் பின்விளைவுகள் என்னனு தெரிஞ்சிருக்கும். தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக மறைந்த தலைவரை கொச்சைப்படுத்தி பேசுவது சரியல்ல. இனிமேல் இதுபோன்ற கருத்துகளை அவர் தெரிவிச்சா வீதியில் நடமாட முடியாத சூழ்நிலை வரும் என எச்சரித்துள்ளார்.
padayappa neelambari
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள முத்து திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது. அப்படத்திற்கான பிரஸ் மீட்டின் போது தான் நீலாம்பரி கேரக்டரை ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதியதாக கூறி இருந்தார் கே.எஸ்.ரவிக்குமார். தற்போது அதற்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளதால், இதற்கு கே.எஸ்.ரவிக்குமார் மன்னிப்பு கேட்பாரா அல்லது பதிலடி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... டிசம்பர் 24-ந் தேதி நடைபெற இருந்த கலைஞர் 100 நிகழ்ச்சி திடீரென தள்ளிவைப்பு - காரணம் என்ன?