Yashika Aannand Abused: 13 வயதில்.. சந்தானம் படத்தில் யாஷிகாவுக்கு நடந்த பாலியல் சீண்டல்! அப்போவே செம்ம தில்லு
நடிகை யாஷிகா ஆனந்த், தன்னுடைய 13 வயதில் படப்பிடிப்பு தளத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக கூறி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Yashika Aannand Latest Photos
டெல்லியைச் சேர்ந்த நடிகை யாஷிகா ஆனந்த், சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தால்... திரை உலகில் வாய்ப்புகளை தேட துவங்கினார். இதன் பலனாக 13 வயதிலேயே, யாஷிகாவுக்கு தமிழில் பிரபல நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Yashika Aannand
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான, 'இனிமே இப்படித்தான்' படத்தில்... யாஷிகா ஆனந்த் நடித்தாலும், ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பட குழுவினர் பாடல் காட்சி ஒன்றில் யாஷிகா ஆனந்த் ஒத்துழைக்காத காரணத்தால் அவரை இப்படத்தில் இருந்து விலக்கியதாக கூறினர்.
Yashika
இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வெளியான 'கவலை வேண்டாம்' திரைப்படம் யாஷிகாவின் முதல் படமாக மாறியது. இப்படத்திற்கு பின்னர் 'துருவங்கள் பதினாறு', 'பாடம்', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'மணியார் குடும்பம்', 'கழுகு 2', 'ஜாம்பி', 'மூக்குத்தி அம்மன்', 'தி லெஜன்ட்', என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் .
Actress Yashika
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகியாக இருக்கும் யாஷிகா ஆனந்த்... தன்னுடைய 13 வயதில் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில்கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Actress yashika anand
அதாவது யாஷிகா ஆனந்த் தன்னுடைய 13 வயதில் கமிட் ஆகி நடித்த சந்தானத்தின் 'இனிமேல் இப்படிதான். படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்த போது... யாஷிகா ஆனந்தை ஒருவர் மிகவும் தவறாக தொட்டு பாலியல் சீண்டல் செய்துள்ளார். அந்த வயதில் யாஷிகா ஆனந்துக்கு அது குட் டச்சா... பேட் டச்சா என்பது கூட தெரியவில்லையாம், எனினும் அது தவறு என்பது மட்டும் புரிந்து... தன்னிடம் தவறுதலாக நடந்த அந்த நபரை எட்டி உதைத்துள்ளார். அவரும் கீழே விழுந்துள்ளார்.
Santhanam
இந்த சம்பவம் குறித்து முதல் முறையாக பேசியுள்ள யாஷிகா ஆனந்த், பெண்களுக்கு எல்லா விஷயத்திலும் தைரியமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து யாஷிகாவின் தைரியத்தை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள்.
யாஷிகா ஆனந்த், தற்போது 'இவன் தான் உத்தமன்', 'ராஜ பீமா', 'பாம்பாட்டம்', 'சல்பர்', 'சிறுத்தை சிவா', உள்ளிட்டா ஐந்து படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.