MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • OOTY: ஊட்டிக்கு சுற்றுலாவிற்கு போறீங்களா! நாளை முதல் 3 நாட்கள் மட்டும் வந்துராதீங்க-ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

OOTY: ஊட்டிக்கு சுற்றுலாவிற்கு போறீங்களா! நாளை முதல் 3 நாட்கள் மட்டும் வந்துராதீங்க-ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

உதகை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

2 Min read
Ajmal Khan
Published : May 17 2024, 12:36 PM IST| Updated : May 17 2024, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கோடை வெயில்- மக்கள் அவதி

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்தது.இதன் காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் நிலை உருவானது. மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் குடும்பம் குடும்பமாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா பகுதிக்கு செல்ல தொடங்கினர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகளவு காணப்பட்டது. இதனையடுத்து இ பாஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டது

25

இ பாஸ் திட்டம் அமல்

ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு செல்பவர்கள் இ பாஸ் பதிவு செய்து சுற்றுலாவிற்கு சென்று வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு உதகையில் மலர் கண்காட்சி தொடங்கப்பட்ட நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.இந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது வெறும் ட்ரெய்லர் தான்.. இனிமே தான் மெயின் பிக்சரே இருக்கு.. குட்நியூஸ் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்..

35

ஊட்டிக்கு ஆரஞ்ச் அலர்ட்

நாளை முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை மையம் அரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அதிகளவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சுற்றுலா செல்வதில் சிக்கல் உருவாகியுள்ளது.

45

நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு.?

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உதகை பகுதியில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது..மேலும் மழை வரும் பொழுது பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பயணம் செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 

55

ஊட்டிக்கு வருவதை தவிருங்கள்

எனவே நாளை முதல் 3 நாட்களுக்கு(18,19,20) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதையும் மீறி வருபவர்கள் பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில் வார விடுமுறை தினமான நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா செல்ல பொதுமக்கள் திட்டமிட்ட நிலையில் கன மழை காரணமாக ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

Courtallam Falls : குற்றாலத்திற்கு போறீங்களா.? இதமான காற்றோடு அருவியில் தண்ணீர் கொட்டுது-இதோ லேட்டஸ்ட் அப்டேட்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
கனமழை
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved