என் அம்மா சொன்ன வார்த்தை! காலில் விழுந்த ரஜினி! திரைப்பட கல்லூரியில் சூப்பர் ஸ்டார் இப்படிப்பட்டவரா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது, எப்படி பட்ட நபர் என்பது குறித்து பிரபல நடிகை ஹேமா சௌத்ரி கடந்த சில வருடங்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பேசி உள்ள தகவல்கள் இப்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கோலிவுட் திரை உலகில் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பிற மொழிகளிலும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதை போல் வெளிநாடுகளில் கூட தலைவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.
குறிப்பாக இவருடைய படங்கள் வெளியாகும் போது, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பல ரசிகர்கள் திரையரங்குகளில் முதன் நாள் முதல் காட்சியை பார்க்க கூடி விடுவார்கள். அதே போல் ரஜினிகாந்தின் படம் ரிலீஸ் ஆகும் போது சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு, ரஜினிகாந்த் பட டிக்கெட்டுடன் விடுமுறை அளிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படம், தலைவருக்கு இருக்கும் மிகப்பெரிய மாஸ் வரவேற்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என கூறலாம். 70 வயதிலும், இப்படி பட்ட சாதனைகளும், ரஜினிகாந்துக்கே உரியது எனலாம்.
ரஜினிகாந்தை பொறுத்தவரை மிகவும் திறமையானவர், அமைதியானவர், ஸ்டைலான மனிதர், எதையும் ஒரு முறைக்கு பத்து முறை யோசித்து செயல்படுத்தக் கூடியவர் என்பது அவருடைய நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் தன்னுடைய நண்பர்களிடம், குடும்பத்தினரிடமும் மிகவும் கலகலப்பாகவும், உற்சாகமாகவும் பாசிட்டிவான எண்ணங்களுடனும் பழகும் மனிதர். ஆன்மீகத்திலும் அதீத நம்பிக்கை கொண்டவராகவே பார்க்கப்படுகிறார்.
குடும்பத்துடன் திருக்கடையூரில் சுவாமி தரிசனம் செய்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்!
ஆனால் ரஜினிகாந்த் திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது எப்படி இருந்தார் என்பது குறித்து சமீபத்தில் நடிகை ஹேமா சௌத்ரி நேர்காணல் ஒன்றில் கூறி அனைவரையும் ஆச்சரியப் படுத்தி உள்ளார். ரஜினிகாந்த் திரைப்படக் கல்லூரியில் படித்தபோது, அவருடன் படித்த சக மாணவி தான் நடிகை ஹேமா சௌத்ரி. இவரின் தாயாரும் திரைப்பட கல்லூரியில் ஆசிரியராக பன்பிருந்து வந்துள்ளார்.
ரஜினிகாந்த் தன்னுடன் படித்த சக மாணவர்களை விட வயதில் மூத்தவராம். கல்லூரியில் படிக்கும் போது யாரிடமும் அதிகம் பேசவும் மாட்டாராம், பழகவும் மாட்டாராம். 25 வயதில் இளைஞர்களுக்கு இருக்கும் சேட்டைகள் எதுவும் இன்றி... ஏதேனும் சாதிக்க வேண்டும் என்கிற வெறியுடன் மட்டுமே படித்தார் என கூறியுள்ளார். அதே போல் பெண்களுக்கு மிகவும் மரியாதை கொடுக்கும் நபர் என ஹேமா சௌத்ரி கூறியுள்ளார்.
அதிர்ச்சி... பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
மேலும் தன்னுடைய அம்மா அவருடைய வகுப்பில் நடிப்பு பயிற்சி ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதில் வகுப்பில் இருந்த மொத்தம் 36 மாணவர்களும் நடித்து காட்டினார்களாம். அப்போது என்னுடைய அம்மா ரஜினியை மட்டும் அழைத்து, உங்க பேரு என்ன என்று கேட்டார். அதற்க்கு ரஜினி தன்னுடைய பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என கூறியுளளார். மாபெரும் நடிகரின் பெயரை வைத்திருக்கிறார் பெரிய உயரத்தை தொடுவாய் என வாழ்த்தினார். உடனே ரஜினி என் அம்மா காலில் விழுந்து வணங்கினார். அந்த அளவுக்கு ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்கும் நபராக இருந்தார் ரஜினி.
மேலும் தன்னுடைய அம்மா அவருடைய வகுப்பில் நடிப்பு பயிற்சி ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதில் வகுப்பில் இருந்த மொத்தம் 36 மாணவர்களும் நடித்து காட்டினார்களாம். அப்போது என்னுடைய அம்மா ரஜினியை மட்டும் அழைத்து, உங்க பேரு என்ன என்று கேட்டார். அதற்க்கு ரஜினி தன்னுடைய பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என கூறியுளளார். மாபெரும் நடிகரின் பெயரை வைத்திருக்கிறார் பெரிய உயரத்தை தொடுவாய் என வாழ்த்தினார். உடனே ரஜினி என் அம்மா காலில் விழுந்து வணங்கினார். அந்த அளவுக்கு ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்கும் நபராக இருந்தார் ரஜினி.