“இப்பவும் பிரபு எனக்கு டார்லிங் தான்.. இது அவரு மனைவிக்கே தெரியும்” பிரபல நடிகை ஓபன் டாக்..
நடிகை ஐஸ்வர்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது காதல் கதை குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.
பழம்பெரும் நடிகை லக்ஷ்மியின் மகள் தான் 1989-ம் ஆண்டு வெளியான அடவிலோ அபிமன்யது என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஐஸ்வர்ய திரையுலகில் அறிமுகமானார். தமிழில் அவர் அறிமுகமானது சிவக்குமார் நடித்த நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தின் மூலம் தான். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வந்தார்.
1994-ம் ஆண்டு தன்வீர் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக படங்களில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டார். எனினும் ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. 2 ஆண்டுகள் மட்டுமே அவரின் திருமண வாழ்க்கை நீடித்தது.
1996-ம் ஆண்டில் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் ஒரு கட்டத்திற்கு பின் போதை பழக்கத்திற்கு அடிமையானதால் அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. பின்னர் அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்து திரையுலகில் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்து வரும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை வெளிப்படையாக பேசி உள்ளார்.
அந்த பேட்டியில் பேசிய அவர் “ சிறு வயதில் இருந்தே இப்போ வரைக்கும் சூர்யாவை சரவணன் என்று தான் அழைப்பேன். சரவணன் மற்றும் கார்த்தி உடன் தான் அதிகம் விளையாடி இருக்கேன். சினிமாவை பற்றி பல விஷயங்களை சிவக்குமார் சார் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.” என்று தெரிவித்தார்.
Aishwarya Bhaskaran
தொடர்ந்து தனது காதல் குறித்து ஐஸ்வர்யா மனம் திறந்து பேசினார்.அப்போது “ 16 வயதில் இருந்தே நான் பிரபுவை காதலிக்கிறேன்.. இப்பவும் அவர் எனக்கு டார்லிங் தான். இந்த விஷயம் அவரின் மனைவி புனிதா அக்காவுக்கே தெரியும். 1986-ம் ஆண்டு வெளியான பாலைவன ரோஜாக்கள் படத்தில் பிரபுவின் நடிப்பை பார்த்து அசந்து போய்விட்டேன். அப்போதிருந்தே பிரபு மீது எனக்கு அளவு கடந்த காதல் இருந்தது.
நான் சுயம்வரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணமே பிரபு உடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தான். ஆம்பள படத்தில் நடிக்கும் போது கூட அவரை நல்லா சைட் அடிச்சேன். பிரபுவின் சின்ன வீடா போக கூட ரெடி என்று அவரிடமே சொல்ல் இருக்கிறேன். அவர் அந்த காலக்கட்டத்தில் அவ்வளவு அழகா இருப்பாரு..” என்று பல விஷயங்களை வெளிப்படையாக பேசி உள்ளார்.
தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா தான் தமிழில் மிஸ் பண்ண படங்கள் குறித்தும் பேசி உள்ளார். தெலுங்கில் நான் நடிக்க கமிட் ஆன போது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு ரோஜா. அந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நான் தான். தேவையில்லாமல் என் பாட்டியால் நான் அதை மிஸ் பண்ணிட்டேன். அதே போல் தளபதி படத்திலும் ஷோபனா ரோலில் நடிக்க மணி சார் முதலில் என்னை தான் அணுகினார். ஆனா அந்த படத்தையும் மிஸ் பண்ணிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.