துபாயில் இருந்து வந்த கையேடு... விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திய சரத்குமார்! வைரலாகும் புகைப்படம்
நடிகர் சரத்குமார் தன்னுடையை குடும்பத்துடன் வெளிநாட்டில் இருந்ததால், விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாத நிலையில், அபுதாபியில் இருந்து வந்த கையேடு, அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வெளியாகியுள்ளது.
தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 8 வருடங்களாகவே உடல் நலமின்றி வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக நுரையீரல் பிரச்சனை காரணமாக அடிக்கடி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 27-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hk7cnjfga1d7d7pqz8zzp6x7/599a4552-2612-42a1-aea8-06010c23e285_300x199xt.jpg)
வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், 28-ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டு மொத்த, திரையுலக பிரபலங்களையும், மக்களையும்... தேமுதிக தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ராதிகா நடித்து வரும் 'பொன்னி சி/ஓ ராணி' சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது! வாழ்த்தும் ரசிகர்கள்!
விஜயகாந்த் உயிரிழந்தது முதல்... தற்போது வரை பலர் அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருவது மட்டும் இன்றி, விஜயகாந்த் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் வீட்டில் உள்ள விஜயகாந்த் மனைவி மற்றும் மகன்களை சந்தித்து, தங்களின் ஆறுதலை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக மனைவி ராதிகா மற்றும் மகனுடன் துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு சென்றிருந்த சரத்குமார், இந்தியா திரும்பிய கையேடு விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியதோடு, விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அவரது திருவுருவ புகைப்படத்திற்கு மலர் தூவி வணங்கினார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.