'காதல்' பரத்துக்கு இந்த நிலையா? இயக்குனரின் வாரிசுக்கு வில்லனாகிறார்!
இயக்குனர் முத்தையாவின் மகன், ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில்... நடிகர் பரத் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிராமத்து பின்னணியில் திரைப்படம் எடுப்பதில் வல்லவரான, இயக்குநர் முத்தையா. விருமன், படத்தை தொடர்ந்து தன்னுடைய மகன் விஜய்யை கதாநாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். அவருடைய பாணியிலேயே கிராமத்து பின்னணியில் படமாக்கப்பட உள்ள இந்த படத்தின், கதை மதுரை மாவட்டத்தை சுற்றி நடப்பது போல் எடுக்கப்பட உள்ளது.
தற்கால இளைஞர்களை மையப்படுத்திய எமோஷனல் டிராமாவாக இயக்க உள்ளார் முத்தையா. விஜய் முத்தையாவுக்கு ஜோடியாக தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இந்த படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் முத்தையா.
இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக எடுக்க பட உள்ளது. பிரமாண்ட செட் அமைத்து இந்த படத்தின் பணிகள் பரபரப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
'பாய்ஸ் ' படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகி, 'காதல்', படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் பரத். இதை தொடர்ந்து 'வெயில்', 'எம் மகன்', கூடல் நகர், என பல முக்கிய படங்களில் ஹீரோவாக நடித்தார். தொடர் தோல்விகளால் ஹீரோ வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பின் நெகடிவ் ரோல்கள் போன்றவற்றிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
அந்த வங்கியில் பரத் அடுத்து இயக்குனர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். ஒரு காலத்தில் முக்கிய ஹீரோவாக இருந்தவர், இளம் ஹீரோவுக்கு வில்லனாக நடிப்பது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.