ஆர்.கே.சுரேஷால் ஆருத்ரா வழக்கில் செம்ம டுவிஸ்ட்... தலைமறைவாக இருந்தவர் திடீரென சென்னை வந்ததன் பின்னணி என்ன?
ஆருத்ரா மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மீண்டும் சென்னை வந்துள்ளதன் ஷாக்கிங் பின்னணியை பற்றி பார்க்கலாம்.
RK suresh
வேலூரை தலையிடமாக கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா நிறுவனத்திற்கு சென்னை, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலும் கிளை இருந்தது. இந்த நிறுவனம் தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் வட்டியுடன் பத்து மாதத்தில் ரூ.3.6 லட்சம் திரும்ப தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளது. இதை நம்பி லட்சக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். ஆனால் இறுதியில் பணம் திரும்ப வராதபோது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01h3c5stkvx1bzk43dzfye97rs/aarudhra-gold-company_300x169xt.jpg)
Aarudhra
இதையடுத்து மோசடி வழக்கு தொடரப்பட்டு, அதில் இதுவரை 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்த 97 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடிக்கப்பட்டதோடு, தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிக்கிய ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆர்.கே.சுரேஷுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகக்கோரி ஆர்.கே.சுரேஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Actor RK Suresh
ஆனால் அதை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்த ஆர்.கே.சுரேஷ், பட தயாரிப்பு தொடர்பாக தான் ரூசோ தனக்கு பண பரிவர்த்தனை செய்ததாகவும் மற்றபடி தனக்கும் அந்த நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என விளக்கம் அளித்ததோடு, தான் துபாயில் இருப்பதால ஆஜராகமுடியாது என கூறி இருந்தார். பின்னர் துபாயில் தலைமறைவாக இருப்பதாக கூறி ஆர்.கே.சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸும் கொடுக்கப்பட்டது.
RK Suresh Aarudhra case
இந்த நிலையில் நேற்று திடீரென துபாயில் இருந்து சென்னைக்கு வந்த ஆர்.கே.சுரேஷை விமான நிலையத்திலேயே மடக்கிப் பிடித்த குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் தான் போலீசில் ஆஜராகவே சென்னை வந்திருப்பதாக கூறியதை அடுத்து அவரை விடுவித்தனர். அவர் நாளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். அவரால் ஆருத்ரா வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தினால் மிகப்பெரிய தலைகள் இதில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பல்லவியாக நடித்ததை ஒத்துக்கொண்ட தீபா; கோபத்தில் கார்த்திக் எடுத்த முடிவு என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்