Asianet News TamilAsianet News Tamil

52 வயசுல இது தேவையா? டீச்சருக்கு செக்ஸ் டார்ச்சர்.. உல்லாசத்து அழைத்தவரை உள்ளே வைத்து கும்மிய போலீஸ்..!

ராமநாதபுரம்  மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை வரலாறு பாடங்கள் நடத்தி வருபவர் ஆசிரியை மலர்விழி. 

sexual harassments...government school teacher Arrest
Author
Ramanathapuram, First Published Dec 5, 2021, 9:47 AM IST

பரமக்குடி அருகே வாட்ஸ்-அப்பில் ஆசிரியைக்கு ஆபாச தகவல்கள் அனுப்பிய உல்லாசத்துக்கு அழைத்த  52 வயது ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் ஆசிரியர்கள் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கோவை, கரூரில் ஆசிரியர் கொடுத்த பாலியல் சீண்டல் காரணமாக அடுத்தடுத்து பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது புகார் அளிக்கலாம் அரசு அறிவித்தது. இதனையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர் மீதான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், 52 வயது வரலாறு ஆசிரியர் ஒருவர் ஆசிரியை  வாட்ஸ்-அப்பில் ஆபாச  தகவல்கள் அனுப்பிய உல்லாசத்துக்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

sexual harassments...government school teacher Arrest

ராமநாதபுரம்  மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை வரலாறு பாடங்கள் நடத்தி வருபவர் ஆசிரியை மலர்விழி.  இவருக்கு அதே பள்ளியில் பணியாற்றும் நாகாட்சி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர்  சந்திரன் (52) என்பவர் செல்போன் மூலம் வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பி உல்லாசத்திற்கு அடிக்கடி அழைத்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். 

sexual harassments...government school teacher Arrest

இதையடுத்து, அதிர்ச்சியடைந்த ஆசிரியை மலர்விழி நடந்த சம்பவத்தை அவரது கணவரிடம் கதறியபடி தெரிவித்தார். இதையடுத்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் சந்திரன் மீது மலர்விழியின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது அவர் குற்றம் செய்தது உறுதியானது. இதனையடுத்து, பெண்ணை மானபங்கம் படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஆசிரியர் சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios