Asianet News TamilAsianet News Tamil

ஏற்காட்டில் அதிகரிக்கும் விபச்சாரம்..சுற்றுலா பயணிகள் ஷாக் !

ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் சொகுசு பங்களாவில்  விபச்சார தொழில் அரங்கேறி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

prostitution taking place in private hostels and luxury bungalows in Yercaud has created a stir
Author
First Published Jul 27, 2022, 7:23 PM IST

தமிழ்நாட்டின் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம். 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் அசரவைக்கும் கண்ணுக்கினிய அழகு மற்றும் இதமான வானிலை இங்கு சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கிறது. வருடந்தோறும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

prostitution taking place in private hostels and luxury bungalows in Yercaud has created a stir

இத்தகைய இடத்தில் தற்போது விபச்சாரம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்காட்டில் இருந்து பக்கோடா பாயிண்ட் செல்லும் வழியில் உள்ள இருலங்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அகத்தியன் (வயது 26) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். 

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சியில் ‘சாதி’ சண்டை வெடிக்கும்..ஸ்ரீமதி மரண சர்ச்சை - உளவுத்துறை பகீர் தகவல் !

இந்த நிலையில் இவரும், சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி ஏ. கானாபூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நிரேஷ் (28) என்பவரும் சேர்ந்து அந்த சொகுசு பங்களாவை குத்தகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் ஏற்காடு போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.  இதில் அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. 

prostitution taking place in private hostels and luxury bungalows in Yercaud has created a stir

அந்த பங்காளில் விபசாரத்தில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் திருப்பாலை அருகே உள்ள பகுதியை  சேர்ந்த 35 இளம்பெண்ணை மீட்டு சேலத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.  சேலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் விபசாரத்திற்கு புரோக்கராக இருந்து செயல்படுவதும், அவர் தான் பண ஆசை காட்டி பெண்களை இங்கு அழைத்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து நிரேஷ் மற்றும் விடுதி மேலாளர் அகத்தியனை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவான சந்தோஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

Follow Us:
Download App:
  • android
  • ios