ஆங்கிலேயருக்கு டிமிக்கி கொடுக்கும் யோகி பாபு.. 80 ஆண்டுக்கு முன் நடந்த True Story - வெளியான Boat பட அப்டேட்!
Yogi Babu : தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான படங்களை கொடுத்த சிம்புதேவன் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் தான் யோகி பாபுவின் "போட்".
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பானியான படங்களை இயக்கி வெளியிட்டு, வெற்றி கண்ட இயக்குனர்கள் பலர் உண்டு. அதே நேரம் தாங்கள் இயக்கும் அந்த வித்தியாசமான திரைப்படங்களை, அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக எடுக்கும் வெகு சில இயக்குனர்களில் ஒருவர் தான் சிம்புதேவன்.
பிரபல இயக்குனர் சேரன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மதுரையைச் சேர்ந்த நபர் தான் சிம்புதேவன். கடந்த 2006ம் ஆண்டு, பிரபல நடிகர் வடிவேலு நடிப்பில், இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளியான "இம்சை அரசன் 23ஆம் புலிகேசி" என்கின்ற மாபெரும் வெற்றி பெற படத்தை இயக்கி, ஒரு ட்ரெண்ட் செட்டராக மாறியவர் சிம்பு தேவன்.
மாமனார் சரத்குமாரை விட மிகப்பெரிய பணக்காரர் நடிகை வரலட்சுமியின் கணவர்.. பிரபலம் சொன்ன தகவல்!
அதன் பிறகு "அறை எண் 305ல் கடவுள்", "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்", "ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்" என்று நல்ல பல படங்களை கொடுத்து வந்த சிம்பு தேவன் இயக்கத்தில், கடந்த 2015ம் ஆண்டு, தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "புலி". தளபதி விஜய்க்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை கொடுத்த படம் அதுவென்றால் மிகையல்ல.
தொடர்ச்சியாக அடுத்தடுத்து 2 படங்களை இயக்கியிருந்த சிம்பு தேவன், கடந்த இரண்டு ஆண்டுகளாக திரைப்படங்களை இயக்காமல் இருந்தார். இந்நிலையில் இந்த 2024ம் ஆண்டு பரவல "சக்தி பிலிம் ஃபேக்டரி" நிறுவனம் தயாரிக்கும் "போட்" என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் சிம்புதேவன். வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி இது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும்.
மேலே கூறிய அந்த அறிவிப்போடு சேர்த்து, இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. நீண்ட நாள் கழித்து, மூத்த பிரபல நடிகர் சின்னி ஜெயந்த் இந்த படத்தில் நடித்துள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆங்கிலேயர்களிடம் இருந்து தப்பி செல்ல விரும்பும் 10 நபர்கள், யோகி பாபுவின் படகில் ஏறி, வங்காள விரிகுடாவில் பயணிக்கிறார்கள். அப்பொழுது அந்த 10 பேருக்கு இடையே நடக்கும் சுவாரசியமான சம்பவங்களின் கோர்வையே இந்த திரைப்படம் என்றும், இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு படகில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அஜித்துக்கே டஃப் கொடுக்கும் அருண் விஜய்! 30 வருட சினிமா வாழ்க்கையில் சேர்த்த சொத்து இதுதான்!