பிக்பாஸ் வீட்டை சுற்றி காட்டிக்கொண்டே பல பட்டாசுகளை கொளுத்தி போட்ட விஜய் சேதுபதி!
Bigg Boss Tamil Season 8 Vijay Sethupathi Speech: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 விஜய் சேதுபதியின் தொகுப்பில் கோலாகலமாகத் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விஜய் சேதுபதி தனது பங்களிப்பு குறித்து யதார்த்தமான கருத்துக்களை முன்வைத்தார்.

Vijay Sethupathi Bigg Boss Tamil Season 8
பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணம் வந்துவிட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 இனிதே தொடங்கியது. கமல் ஹாசனுக்கு பிறகு விஜய் சேதுபதி இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு ரூ.60 கோடி வரையில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சரி, கதைக்கு வருவோம், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் என்ன காஸ்டியூம் அணிந்திருக்கிறார், என்ன பேசுகிறார், எப்படி பேசுகிறார் என்பது உன்னிப்பாக கவனிக்கப்படும்.
Bigg Boss Tamil Season 8
ஆளும் புது ஆட்டமும் புதுசு என்பது போன்று விஜய் சேதுபதியுடன் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 பிரம்மாண்டமாக தொடங்கியது. இதற்காக ரூம் போட்டெல்லாம் யோசிக்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் யதார்த்தமானவை. நடிகர் பார்த்திபன் கதை பற்றி பேசினார். சில விஷயங்கள் பண்ணும் போது இந்த உலகத்தில் எது நம்ம கண்ட்ரோலில் இல்லையோ அத நம்ம கண்ட்ரோல்ல எடுக்க டிரை பண்ண கூடாது என்பதை பல முறை நான் கத்துக்கிட்டே இருக்கேன்.
Vijay Sethupathi
இந்த முறையும் கத்துக்கிட்ட முக்கியமான பாடம். ஆட போறது நான் இல்லை. நான் வேடிக்கை தான் பாக்க போறேன். சில நேரம் ஆட்டத்துல இருக்கும் போது தீர்ப்பு கொடுப்பது ஈஸி, ஆடறது கஷ்டமுன்னு தோணும், ஆனால் தீர்ப்பு கொடுக்கும் ஆடுறது ஈஸி, தீர்ப்பு கொடுப்பது தான் கஷ்டமுன்னு தோணும்.
தீர்ப்பு கொடுக்கும் போது எல்லோரையும் திருப்தி படுத்த வேண்டும். தீர்ப்பு கொடுக்கும் போது நான் இப்படிப்பட்ட ஒருவனாக இருப்பேன்னு தெரியாது. எதாவது தப்பாயிருச்சுன்னா பாத்து பேசுப்போம். என்னை கேட்டா பாதி பொய்ய உங்க மேல போட்டுரேன். ஓட்டு போட்டது அவங்கதான், உங்கள கேட்டால், தீர்ப்பு கொடுத்தவர கேளுங்கன்னு சொல்லிடுங்க என்று ஒவ்வொரு வார்த்தையையும் யதார்த்தமாகவே பேசினார்.
Bigg Boss Tamil Season 8
அதன் பிறகு பிக்பாஸ் வீட்டிற்கு காலடி எடுத்து வைத்தார். இந்த வீடு எல்லோருக்கும் பொதுவானது. இதுதான் கார்டன் ஏரியா. இங்க காதலிச்சிருக்காங்க, கைய பிடிச்சிருக்காங்க, கண்ண கசக்கியிருக்காங்க, பிளான் பண்ணிருக்காங்க, இப்போ வரப்போகும் போட்டியாளர்கள் என்ன பண்ணுறாங்க என்று பார்க்கலாம் என்றார்.
இதையடுத்து விஜய் சேதுபதியை பிக்பாஸ் வரவேற்றார். விஜய குருநாத சேதுபதி என்று அழைத்த பிக்பாஸ் அதன் பிறகு சேது சார் என்று குறிப்பிட்டார். வீட்டிற்குள் சூழ்ச்சி என்பதை புரிந்து கொண்ட சேதுபதி, பாதுகாப்பாக விளையாடுவார்கள் என்று நம்புவதாக கூறினார். வீட்டிற்குள் முதலில் கிச்சனுக்கு சென்றார். வீட்டை சுற்றிக் காட்டிய விஜய் சேதுபதி முதல் போட்டியாளராக ரவீந்தர் சந்திரசேகரை வரவேற்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.