தமிழ் திரையுலகில் பன்முக திறமையாளராக அறியப்படுபவர் டி.ராஜேந்தர். மயிலாடுதுறையை சேர்ந்த இவர், எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி சென்னைக்கு வந்து ஒரு துணை இயக்குனராக பணியாற்றி பின்னரே இயக்குனராக மாறினார்.
தன்னுடைய முதல் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த டி.ராஜேந்தர்.. பின்னர் வசந்த அழைப்புகள், கிளிஞ்சல்கள், ரயில் பயணங்கள், நெஞ்சில் ஒரு ராகம், தங்கைக்கோர் கீதம், உயிர் உள்ளவரை உஷா, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்தார்.
சில படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை உஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட டி.ராஜேந்தருக்கு, சிலம்பரசன், இலக்கியா, குறளரசன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
பின்னர் கதாநாயகனாக 'காதல் அழிவதில்லை' படத்தில் அறிமுகமான சிம்பு, தற்போது வரை பல பெண் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் ஹீரோவாக உள்ளார்.
அதே போல் அறிமுகமான 3 வருடத்தில் முன்னனி நடிகராகவும் வளர்ந்து நின்றார் சிம்பு. இவரை தன்னுடைய படஙக்ளில் நடிக்க வைக்க போட்டி போட்ட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் பலர் உள்ளனர்.
இதை தொடர்ந்து இவரின் காதல் விஷயமும் சிம்புவை கொஞ்சம் அசைத்து பார்த்தது. திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பே ஸ்டார் நடிகரின் மகளை இவர் காதலித்ததாக கூறப்பட்டது. அவர் சத்தமில்லாமல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
ஆனால் இவரின் தங்கை இலக்கியாவுக்கு திருமணம் ஆகி சுமார் 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதே போல் சிம்புவும் தம்பி குறளரசனுக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
திருமணம் எளிமையாக குடும்ப உறவினர்கள் மத்தியில் மட்டுமே நடந்தாலும், டி.ராஜேந்தர் தன்னுடைய மகளுக்கு சென்னையில் உள்ள லீலா பேலஸில் மிக பிரமாண்டமாக வரவேற்பை நடத்தினார்.
இலக்கியா திருமணம் கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்து முடிந்த நிலையில், இவருக்கு தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இலக்கியாவின் திருமண வரவேற்ப்பு மற்றும் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.