மதுவை கீழே ஊற்றி BJP நூதன ஆர்ப்பாட்டம்.. கட்டிங் கேட்டு அலப்பறை செய்த "குடிமகன்" - இறுதியில் வென்றது யார்?

மதுவை கீழே ஊற்றி BJP நூதன ஆர்ப்பாட்டம்.. கட்டிங் கேட்டு அலப்பறை செய்த "குடிமகன்" - இறுதியில் வென்றது யார்?

Ansgar R |  
Published : Jun 23, 2024, 11:09 PM ISTUpdated : Jun 23, 2024, 11:18 PM IST

Kumbakonam : கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, திமுக அரசை கண்டித்து, குடந்தை பகுதி பாஜகவினர் மதுவை கீழே கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 50க்கும் அதிகமான நபர்கள் இறந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது என்றால் அது மிகையல்ல. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருனாபுரம் பகுதியில் நான் இந்த சோக நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த கோர சம்பவத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் காரணம் என்று கூறி, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

நேற்று சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில், நாளை திங்கட்கிழமை ஜூன் மாதம் 24ம் தேதி, அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.  

இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த பாஜகவினர், கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து தங்களுடைய ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், மதுபான கடையில் இருந்து வாங்கிய பீர்பாட்டில்களை சாலையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்பொழுது அவர்களுக்கு அருகாமையில், மதுவை கீழே ஊற்றிக் கொண்டிருப்பதை கண்டு கொண்டிருந்த மதுப்பிரியர் ஒருவர் அதை தனக்கு தருமாறும், கீழே கொட்ட வேண்டாம் என்றும் ஏக்கத்தோடு அவர்களை பார்த்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், அவர்கள் கையில் இருந்து பாட்டிலை பிடுங்கவும் முயற்சி செய்தார். 

இறுதியில் அவர் தொல்லை தாங்காத பாஜகவினர், அவரிடம் ஒரு பாட்டிலை கொடுத்து அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி
Read more