ஒரு ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய பணியை துவங்கி, பின்னர் ராஜ் டிவியில் வீடியோ ஜாக்கியாக மாறியவர் இன்று முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக இருக்கும் ரக்சன்.
'ஜோடி ஃபன் அன்லிமிடெட்' என்கிற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ரக்சன், செமி பைனலில் நிகழ்ச்சிகள் விட்டு வெளியேறினார். இதை தொடர்ந்து வழக்கம்போல் தன்னுடைய தொகுப்பாளர் பணியை துவங்கிய இவர் 'ரெடி ஸ்டெடி போ' நிகழ்ச்சிக்கு பின், 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கினார்.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த சீசன் முதல் 1.5 லட்சம் சம்பளமாக வாங்கி வந்த இவர், இந்த சீசனில் 2 லட்சம் சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதை போல் மணிமேகலை 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சம்பளம் பெறலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.