நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி.. இடைத்தரகர், நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கௌதமி புகார்!

நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி.. இடைத்தரகர், நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கௌதமி புகார்!

Ansgar R |  
Published : May 06, 2024, 09:13 PM IST

Actress Gautami : தன்னை ஏமாற்றிய இட தரகர் மற்றும் நிலத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை கௌதமி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் நேரில் புகார் அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஸ்வாத்தான் கிராமத்தில் நிலம் வாங்குவதற்காக காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் நடிகை கௌதமி மூன்று கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஆனால் பிளசிங் அக்ரோ ஃபார்ம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்வாத்தான் கிராமத்தில் உள்ள 64 ஏக்கர் நிலத்தை 57 லட்ச ரூபாய்க்கு அழகப்பன் பவர் எழுதி வாங்கியுள்ளார். 

சம்பந்தப்பட்ட இடத்தை விற்கவோ வாங்கவோ செஃபி அமைப்பு தடை விதித்திருந்த நிலையில், அதனை நடிகை கௌதமியிடம் சொல்லமால் ஏமாற்றி அந்த இடத்தை தன்னிடம் நிலம் வாங்கித் தருவதாக அழகப்பன் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி விற்றதாக குற்றம்சாட்டிய நடிகை கௌதமி, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்திருந்த நிலையில் இன்று மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு  ஆஜராகி விபரங்களை தெரிவித்தார்.

04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
04:19ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்
02:1741 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக நடிகர் விஜய் டெல்லி புறப்பட்டார்..
04:54பாஜக அரசு எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது ! கி. வீரமணி அதிரடி பேச்சு
06:353000 பொங்கல் பரிசு திமுக கட்சி நிதி அல்ல? ....மக்களின் வரி பணம் ! ஆர்.பி .உதயகுமார் குற்றச்சாட்டு
03:55ஜனநாயகன் திரைப்படம் நெருக்கடிக்கு அரசியல் காரணம் இல்லை ! நடிகர் சரத்குமார் பேட்டி
06:34திரை உலகத்தின் மீது தாக்குதல் அது ஒரு கலை சார்ந்த படைப்பு - எம்.பி ஜோதி மணி பேட்டி
03:37நிச்சயமாக கோவில் யானைகளை கொண்டு வர முயற்சி செய்கிறோம் இந்த ஆட்சியில் நல்லதே நடக்கும்
04:36விஜய்யின் படத்தை வெளியிடுவதற்கு நெருக்கடி கொடுப்பதெல்லாம் தவறு ! அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி