Namakkal Crime News
நாமக்கல் மாவட்டம் நெ.3 கொமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (46). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2-ம் தேதி மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பழனிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
illegal Love
அப்போது செல்வி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். எனது கணவருக்கும், கள்ளக்காதலனான ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமியும் நண்பர்கள். அடிக்கடி கந்தசாமி வீட்டுக்கு வந்து சென்ற போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். இதை அறிந்த கணவர் மனைவியை கண்டித்ததும் மட்டுமல்லாமல் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால், அவரை செய்ய திட்டமிட்டோம்.