Anna Serial : சண்முகம் வீட்டில் விசேஷம்... தடுத்த சௌந்தரபாண்டி; நோஸ் கட் பண்ணிய இசக்கி - அண்ணா சீரியல் அப்டேட்

First Published Mar 17, 2024, 3:59 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகத்தின் குடும்பத்தை பிரிக்கணும் என திட்டம் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பாண்டியம்மா மற்றும் முத்துப்பாண்டி என மூவரும் சேர்ந்து சண்முகத்தின் குடும்பத்தை பிரிக்கணும் என திட்டம் போட்ட நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கனி அவளை விட்டுவிடுகிறேன் என்று சொன்னீங்க அவ அண்ணனை காட்டிக் கொடுக்கல, அவ அந்தக் குடும்பத்தோடவே இருக்கக் கூடாது என பிளான் போடுகின்றனர். 

zee Tamil Anna serial

மறுபக்கம் சண்முகம் கடையில் இருக்க பரணி போன் செய்து உடனே என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ என்று சொல்ல என்னால வர முடியாது என்று சொல்ல பரணி நீ இப்ப வந்தே ஆகணும் என்று கோபப்பட சண்முகம் கிளம்பிச் செல்லும்போது ஒருவர் வந்து கல்யாணம் என பத்திரிக்கை கொடுக்க சண்முகம் கல்யாணமெல்லாம் பண்ணாத வாழ்க்கை நல்லா இருக்காது என அட்வைஸ் செய்துவிட்டு செல்கிறான்.

பரணியை பிக்கப் செய்து கொண்டு மெதுவாக வண்டியை ஓட்ட பரணி வேகமாக போ என்று சொல்ல சண்முகம் அவ்வளவுதான் போக முடியும் என்று சொல்ல கனி வயித்துக்கு வந்துட்டா என்ற விஷயத்தை கூறுகிறாள் பரணி. 

இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் தியேட்டரில் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் கூட ஆகல... அதற்குள் ஓடிடி ரிலீஸா? பிரேமலு தந்த அதிர்ச்சி

Anna serial Update

இந்தச் செய்தியை கேட்டு உச்சகட்ட சந்தோஷமடையும் சண்முகம் கனி எப்போதும் என் கூடவே இருக்கணும் கல்யாணம் ஆனாலும் அவள் என் கூடவே இருக்கணும் என்று முருகனை வேண்ட இப்போ உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் உன்கூட தான் இருக்கேன் அப்படித்தான் கனியும் அவ மாமியார் வீட்டுக்கு போவா.. கனி உன் கூடவே இருக்கணும்னா நான் என் அம்மா வீட்டுக்கு போயிடவா என்று பரணி கேட்க நீ ஊ-னு சொல்லு இப்பவே நான் கூட்டிட்டு போய் விடுகிறேன் என்று சொல்ல பரணி கோபப்படுகிறாள். 

Anna Serial Today Episode

பிறகு பரணி வேகமா போ என்று சொல்ல சண்முகம் வீட்டுக்கு வந்து கனியை பார்க்க செல்ல பரணி அவனைத் தடுத்து நிறுத்தி நீ எங்க போற இங்கேயே இரு என்று வெளியே நிற்க வைத்துவிட்டு உள்ளே சென்று கனியை பார்த்து ஆசீர்வாதம் செய்து சந்தோஷப்படுகிறாள்.

உடனே பாக்கியத்துக்கு தகவல் கொடுக்க அவளை சந்தோஷப்பட பக்கத்தில் இருந்து இதை கேட்ட இசக்கியும் மிகுந்த சந்தோஷப்படுகிறாள். பாக்கியம் கனிக்கு பச்சை முட்டை உடைத்து கொடுங்க இது ஒன்னு புது துணி எடுத்துட்டு வரேன் என்று கிளம்ப இசக்கி நானும் வரேன் என்று சொல்ல பாக்கியம் சரிபா நடக்கிறத பாத்துக்கலாம் என்று சொல்லி சிவபாலனை ஆட்டோ பிடிக்க சொல்கிறாள். 

Anna Serial March 17 episode

ஆட்டோ பிடிக்க ஓடிவரும் சிவபாலன் சௌந்தரபாண்டியை இடித்து தள்ளி ஓட எங்க இவ்வளவு வேகமா போற என்று கேட்க கனி வயசுக்கு வந்த விஷயத்தை சொல்கிறான். பாக்கியம் மற்றும் இசக்கி இருவரும் கிளம்பி வெளியே வர சௌந்தரபாண்டி நீங்க போகக்கூடாது என தடுக்க நாங்க போவோம் என சண்டை போட்டு பாக்கியம் கிளம்பி வருகிறாள். 

உடனே பாண்டியம்மா உன் பொண்டாட்டி உன்னை மதிக்கிறது கிடையாது என சௌந்தரபாண்டியை ஏற்றிவிட அவர் சண்முகத்துக்கு போன் போட்டு மரியாதை இல்லாமல் பேசி அவரை கோபத்திற்கு கொண்டு செல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... 2022-ல் 4 கோடி; 2024ல் 100 கோடி சம்பளம்! காந்தாரா படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை - ரிஷப் ஷெட்டி Net Worth இதோ

click me!