Selvaraghavan
இயக்குனரும், தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகவன், துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இந்த படத்தின் மூலம் தான் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனான, தனுஷும் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தின் எதிர்பாராத வெற்றி இயக்குனர் செல்வராகவனை திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்கவைத்தது.
அதே போல் இவரின் கனவு படமாக உருவாகிய இரண்டாம் உலகம் திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், இதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான NGK, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. எனவே படங்கள் இயக்குவதற்கு தற்காலிகமாக ரெஸ்ட் விட்டுவிட்டு நடிகராக களமிறங்கி கலக்கி வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் குறித்து, பிரபல காமெடி நடிகர் பவா லட்சுமணன் கொடுத்த பேட்டி ஒன்றில், செல்வராகவன் பற்றி பேசியுள்ளார். "செல்வராகவன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருகிறார் என்றாலே எல்லோரும் பயந்து நடுங்குவார்கள். போய் ஒளிந்து கொள்வார்கள். கார்ட்டூன் ஆர்டிஸ்டின் மகள் தான் அவர் முன்பு தைரியமாக பேசுவார் என தெரிவித்துள்ளார்.