Asianet News TamilAsianet News Tamil

வாட்டர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் அதிரடி முடிவு!

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில்  செய்தியாளர்களைச் கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அனந்த நாராயணன் சந்தித்தார்.
 

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில்  செய்தியாளர்களைச் கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அனந்த நாராயணன் சந்தித்தார்.

அரசாணை 142 - ன் படி அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் குடிநீருக்காக நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதில் பல்வேறு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதனால் 60 % அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் இதன் காரணமாக இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும்  அவர் தெரிவித்தார். 

மேலும் அரசாணை 142-ஐ மாற்றம்ச் செய்தோ அல்லது புதிய அரசாணை வெளியிட்டோ குடிநீர் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் இதற்கு தீர்வு ஏற்படும்வரை தங்களது வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது, இந்த போராட்டத்தில் சமரசம் ஏற்பட்டதால் இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனினும் தனியார் லாரி போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Video Top Stories