11:54 PM (IST) May 31

ஜிடிபி வளர்ச்சி - பிரதமர் பெருமிதம்

கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது, நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

4வது காலாண்டில் ஜிடிபி 6.1% உயர்வு; பொருளாதார வளர்ச்சி 7.2%

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2022-23 ஆம் ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி புள்ளிவிவரங்கள் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தின் திறனை காட்டுவதாக உள்ளன என்று தெரிவித்துள்ளார். 

நம்பிக்கைக்குரிய பாதையில் இந்தியப் பொருளாதாரம்! ஜிடிபி வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!

11:51 PM (IST) May 31

சென்னை திரும்பிய முதல்வர் மு.க. ஸ்டாலின்

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இரவு 10 மணி அளவில் சென்னை திரும்பியதும் பேட்டி அளித்த முதல்வர், ரூ.3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறினார்.

ரூ.3233 கோடி முதலீடுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! சென்னையில் கெத்தாக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

04:07 PM (IST) May 31

ஆபாச வீடியோ காட்டி அதேமாதிரி பண்ண சொல்லி அடிச்சாரு! விஷ்ணுகாந்த் செய்த கொடுமைகளை லிஸ்ட் போட்டு சொன்ன சம்யுக்தா

சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சம்யுக்தா, தற்போது அவரை பிரிந்த பின்னர் அவரைப்பற்றி பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார்.

03:23 PM (IST) May 31

The Global Automaker Rating 2022: மின்சார வாகனச் சந்தையில் முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா?

2022ம் ஆண்டின் குளோபல் ஆட்டோமேக்கர் மதிப்பீடு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் மின்சார வாகனச் சந்தையில் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

02:53 PM (IST) May 31

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை ஊத்தப்போகுது - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

02:45 PM (IST) May 31

இலங்கையின் சுற்றுலாத்துறை தூதர் ஆகிறாரா சூப்பர்ஸ்டார்?... ரஜினி வீட்டில் நிகழ்ந்த சந்திப்பால் வெடித்த சர்ச்சை

தென்னிந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதர் வெங்கடேஷ்வரன் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளது புது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

02:14 PM (IST) May 31

மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்.. செங்கல்பட்டில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்.!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் தெரிவித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை

02:13 PM (IST) May 31

ஸ்டாலின் மதுரைக்கு செய்த துரோகம்! பாலியல் புகாரில் சிக்கிய வைரமுத்து மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க!அண்ணாமலை.!

கைது செய்ததால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மல்யுத்த வீரர்கள் கூறுவது ஏற்புடையதல்ல. கவிஞர் வைரமுத்து மீது பாடகி ஒருவர் பாலியல் புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மல்யுத்த வீரர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லா? விளையாட்டு வீராங்கனைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் மீதே நம்பிக்கை இல்லை என்றால் யாரை நம்புவார்கள் என்று தெரியவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். 

அண்ணாமலை

02:09 PM (IST) May 31

டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.. இளைஞர்கள் பாவம் - ஓபிஎஸ் கொடுத்த ஐடியா

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்மூலம் தொகுதி-4 தேர்வுக்கான தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வந்துள்ள நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

01:05 PM (IST) May 31

“எப்புட்றா.. ஹே ஒன்னத்தான்... ஒன்னத்தான்.!" மீம்ஸ் மூலம் விழிப்புணர்வை உண்டாக்கும் தஞ்சாவூர் காவல்துறை

"ஹே ஒன்னத்தான்... ஒன்னத்தான்..." என இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

12:41 PM (IST) May 31

மோடி அரசால் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த முடியவில்லை.. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை விமர்சித்த ராகுல் காந்தி, உண்மையான பிரச்சினைகளில் மோடி அரசால் செயல்பட முடியாது என்பதால், பிரதமர் இந்த காரியத்தை செய்தார் என்று கூறி உள்ளார்.

12:24 PM (IST) May 31

தற்கொலை கிடையாது.. சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

பள்ளியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் கேரள சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

11:09 AM (IST) May 31

ரொம்ப காஸ்ட்லி வில்லனா இருக்காரேப்பா... பிரபாஸுக்கு வில்லனா நடிக்க ரூ.150 கோடி சம்பளம் கேட்ட கமல்ஹாசன்?

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசன் ரூ.150 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

11:05 AM (IST) May 31

செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான முக்கிய புள்ளி.. வசமாக சிக்கிய மைதிலி - ஐடி சோதனையில் பரபரப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி மீது டாஸ்மாக் கமிஷன், சொத்து குவிப்பு, மிரட்டல் போன்ற குற்றசாட்டுகள் தொடர்ச்சியாக எழுந்து வந்தது.

10:54 AM (IST) May 31

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி.. இது எங்களது உரிமை.. டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்..!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

டி.கே.சிவக்குமார்

10:54 AM (IST) May 31

கம்பத்தை கதறவிட்டு போக்குகாட்டும் அரிக்கொம்பன் யானை.. வனத்துறை பரபரப்பு தகவல்..!

அரிக்கொம்பன் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க தமிழ்நாடு அரசு பல துறைகளுடன் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கையை எடுத்து வருகிறது என வனத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரிக்கொம்பன் காட்டு யானை

10:28 AM (IST) May 31

Gold Rate Today : தாறுமாறாக அதிகரித்த தங்கம் விலை.. இப்போதைக்கு தங்கம் வாங்க முடியாது போல இருக்கே !!

சில தினங்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.

09:23 AM (IST) May 31

பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம்

பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காண்பித்து மாணவர்கள் பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. 

09:03 AM (IST) May 31

சிங்கப்பூர்: இந்தியாவை சேர்ந்த பூசாரிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை.. கோவிலில் செய்த காரியம் - பரபரப்பு

சிங்கப்பூரில் 1.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோயில் நகைகளை அடகு வைத்த இந்தியாவை சேர்ந்த பூசாரி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

08:26 AM (IST) May 31

குற்றப்பத்திரிகையில் என்ன இருக்குது தெரியாமல் எப்படி கருத்து கூற முடியும்? CBCID விசாரணை மீது நம்பிக்கை இல்லை!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபர் கீர்த்திகா, 2வது நபர் ஹரிப்பிரியா ஆகிய 2 ஆசிரியர்கள் வழக்கில் இருந்து நீக்கியது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் எங்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என ஸ்ரீமதியின் தாய் கூறியுள்ளார். 

மாணவி ஸ்ரீமதி