TamilNews Highlights: காலணி வீசப்பட்ட விவகாரம்... பாஜகவுக்கு துரைமுருகன் கடும் கண்டனம்!!

Tamil News live updates today on August 13  2022

ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அரசின் சார்பில் முதலில் மரியாதை செய்த பிறகே, பாஜகவினர் மரியாதை செய்ய வேண்டும் என அமைச்சர் பிடிஆர், கூறியதால் பாஜகவினர் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிடிஆர் சென்ற கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து பாஜகவுக்கு திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.    

9:56 PM IST

சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை... பாஜகவை கடுமையாக விமர்சித்த பழனிவேல் தியாகராஜன்!!

ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இதை அடுத்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவை விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க...

9:16 PM IST

“மண்டைய உடைச்சிடுவேன்டா ராஸ்கல்..” செய்தியாளரிடம் வம்புக்கு போன சீமான் !

இந்த பேட்டியின் போது செய்தியாளர் ஒருவர் வரிசையாக கேள்வி கேட்க, இதனால் கோபமடைந்தார் சீமான். அப்போது சீமான் செய்தியாளரை, டே மண்டையை உடைத்து விடுவேன்டா ராஸ்கல்’ என்று திட்டியுள்ளார்.

மேலும் படிக்க

8:34 PM IST

பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு..போலீஸ் எடுத்த அதிரடி முடிவு

காரில் ஏறி புறப்பட்ட நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பிஜேபியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் தனது செருப்பை எரிந்துள்ளார். சிலர் காரை வழிமறித்து தாக்கியுள்ளனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்தினர்.

மேலும் படிக்க

8:13 PM IST

பிடிஆர் கார் மீது வீசப்பட்ட செருப்பு.. போராட்டத்தில் குதித்த திமுக - தமிழக முழுவதும் பரபரப்பு

அஞ்சலி நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து பிடிஆர் சென்ற பொது கூட்டத்தில் இருந்த சிலர் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசினர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க

5:39 PM IST

ஜெயலலிதா இருந்திருந்தால்.. செருப்படி விழுவது தலைவரே.. மோதும் திமுக Vs பாஜக

கோபமடைந்த பாஜகவினர் , ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசினர்.

மேலும் படிக்க

5:23 PM IST

சென்னை தனியார் வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு பணம் கொள்ளை... அதிர்ச்சி தரும் முதற்கட்ட தகவல்!!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் நகை மற்றும் பணம் மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வங்கிக்குள் பட்டப்பகலில் நுழைந்த மர்ம நபர்கள், வங்கியின் மேலாளர் மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு வங்கியில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கியில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிங்க...

3:37 PM IST

அந்த வார்த்தை சொன்ன பிடிஆர்.. கடுப்பான பாஜகவினர்.. வைரல் வீடியோ

மறைந்த  ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  மற்றும்  மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க

3:35 PM IST

மதுரை வீரர் லட்சுமணன் வீர மரணம்

தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்   3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணனும் ஒருவர்.

மேலும் படிக்க

3:17 PM IST

ஜாதி, மத பேதமின்றி ஆகஸ்ட் 15-ந் தேதி மறக்காம இதை செய்யுங்க - நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருகிற 15-ந் தேதி, ஜாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல், நாம எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு, ஒரு 2 அல்லது 3 அடி நீளம் கொண்ட கம்பில் நமது நாட்டின் தேசிய கொடியை கட்டி, நம் வருங்கால சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் கையால நம் வீட்டின் முன் அந்த கொடியை பறக்கவிட்டு, நாம் பெருமைகொள்வோம் என ரஜினி கூறி உள்ளார். மேலும் படிக்க

2:35 PM IST

சில நிமிடங்கள் செலவிடுங்க! பிஎப் சந்தாதாரர் வீட்டிலிருந்தே ஆன்லைனில் UAN எண் பெறலாம்: எப்படி?

இபிஎப்ஓ சந்தாதாரர்கள் வீட்டிலிருந்தே படியே தங்களுடைய யுஏஎன்(UAN) எண்ணை ஆன் லைன் மூலம் சில நிமிடங்களில் பெறலாம். இதன் மூலம் பிஎப் கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் பெற முடியும்.விரிவான செய்திகளுக்கு

2:34 PM IST

ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் மகன் உள்பட 4 பேர் காஷ்மீர் அரசுப் பணியிலிருந்து நீக்கம்

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சயத் சலாலுதீன் மகன் சயத் அப்துல் முயீத், சிறையில் இருக்கும் பிரிவினைவாதத் தலைவர் பிட்டா கராத்தே மனைவி உள்பட 4 பேர் ஜம்மு காஷ்மீர் அரசுப்பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.விரிவான செய்திகளுக்கு

2:34 PM IST

கே.ஜி.எஃப் டீமிற்காக சுதா கொங்கரா இயக்க உள்ள பிரம்மாண்ட படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களையும் பிரம்மாண்டமாக தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் படிக்க

2:09 PM IST

தூக்கத்தை கெடுத்த ஒன்றரை வயது மகன்.. துடிக்க துடிக்க கொன்ற தந்தை.. மூக்கில் வாயில் ரத்தம் வடிந்து பலி.

தூக்கத்தை கெடுத்த ஒன்றரை வயது மகனை தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் திடீரென அடங்கியாதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்ததில் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சில நேரங்களில் மனிதர்கள் விலங்குகளை விட கொடூரமாக நடந்து கொள்கின்றனர். மேலும் படிக்க

2:07 PM IST

சென்னை விமான நிலையத்தில் ராஜநாகம்.. அசால்டா பையில் வைத்து தூக்கி வந்த பயணி.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட  ராஜநாகம், மலைப்பாம்பு, ஆமை, குரங்கு குட்டி போன்றவை மீண்டும் அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.நேற்றிரவு தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட கோடிய விஷ ஜந்துக்கள் கடந்திவரப்பட்ட நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் இந்நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேலும் படிக்க

 
 

2:06 PM IST

ரூ. 25க்கு தேசிய கொடியை வாங்கிதான் ஆகணும்.. இல்லனா 1000 ஆபராதம்.. கோவை மாநகராட்சி ஊழியர்கள் அட்ராசிட்டி.

கோவையில் உள்ள கடைகளில் மாநகராட்சி ஊழியர்கள் தேசியக்கொடியினை 25 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டுமென நிர்ப்பந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கொடியை வாங்கிக் கொள்ளாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் கடைகாரர்களை மிரட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளத்தில் பரவியுள்ளதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் படிக்க
 

2:05 PM IST

தொடர்ந்து மாணவிக்கு ஆபாச மெசேஜ்.. தொடக்கூடாத இடங்களில் கை வைத்து அசிங்கம்.. தமிழ் ஐயா சில்மிஷம்

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியதுடன்  உடல் ரீதியான பாலியல் சீண்டலில்  தமிழ் ஆசிரியர் ஈடுபட்டுவந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில்  அந்த ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் படிக்க

 
 

2:03 PM IST

அமைச்சர் பிடிஆர் கார் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு.. விரட்டி வந்து பாஜகவினர் செய்த சம்பவம்.

தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்த வந்த போது அவரது கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அமைச்சரின் காரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
 

1:41 PM IST

ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் காட்டில் மழை: ரூ.2999க்கு ரீசார்ஜ், ரூ.3 ஆயிரத்துக்கு இலவசங்கள்

75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது. ஓர் ஆண்டுக்கு மொத்தமாக ரூ.2,999க்கு ரீசார்ஜ் செய்தால், ரூ.3 ஆயிரத்துக்கான இலவசங்களை அளிக்கிறது.விரிவான செய்திகளுக்கு

12:55 PM IST

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று

காங்கிரஸ் தலைவர் சோனியாா கந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம்தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் 2வது முறையாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

12:54 PM IST

பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்த ‘விருமன்’... அதுவும் ஒரே நாளில் இத்தனை கோடியா..!

நடிகர் கார்த்தியின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்கிற புதிய சாதனையை விருமன் படைத்துள்ளது. இதற்குமுன் சுல்தான் படம் ரூ.5 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது விருமன் அதனை முறியடித்துள்ளது.மேலும் படிக்க

12:36 PM IST

NLC யில் காலி பணியிடங்கள்.. பொறியியல் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி காப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தாரர்கள் பொறியியல் மற்றும் தொழில்நூட்ப பட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலும் படிக்க

11:39 AM IST

jio post paid: netflix: இலவசமாக நெட்பிளிக்ஸ் சந்தா வேணுமா? ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த சூப்பர் திட்டத்தில் சேருங்க

நெட்பிளிக்ஸில் இலவசமாக சந்தாவாய்ப்பு தேவை என நினைப்போருக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பல அருமையான சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு........

11:38 AM IST

கொலை செய்ய உத்தரவிட்ட ஈரான் அதிபர்.. சர்ச்சைகளின் நாயகன் - யார் இந்த சல்மான் ருஷ்டி ?

947 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார் சல்மான் ருஷ்டி. இவரது தந்தை கேம்பிரிட்ஜில் படித்த வழக்கறிஞர் ஆவார். அதுமட்டுமல்ல பிரபல வர்த்தகராகவும் இருந்துள்ளார். மும்பையில் தனியார் பள்ளியிலும், பின்னர் இங்கிலாந்தின் வார்விக் - ஷயரில் உள்ள உறைவிடப் பள்ளியிலும் படித்த இவர், கிங்ஸ் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.மேலும் படிக்க

11:16 AM IST

rss: national flag: rss flag: ஆர்எஸ்எஸ் அமைப்பும் மாற்றியது! சமூக ஊடகத்தில் சுயவிவரப் படத்தில் தேசியக் கொடி

நாட்டின் 75-வது சுதந்திரதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பும்,தனது சமூக ஊடக கணக்கில் சுயவிவரப் படம்(profile picture) தேசியக் கொடியை வைத்தது. விரிவான செய்திகளுக்கு........

11:01 AM IST

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிவரஞ்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நெல் ஜெயராமனுக்கு பின் பல மாநிலங்களுக்கு சென்று 1,250 பாரம்பரிய நெல் ரகத்தை சிவரஞ்சனி மீட்டெடுத்துள்ளார்.

11:00 AM IST

மத்திய ஆயுதப்படையில் 3,960 காலி பணியிடங்கள்.. ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்ட எஸ்எஸ்சி..எப்படி விண்ணப்பிப்பது?

புது டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க

10:39 AM IST

உதயநிதி வெளியிட்ட முதல் இந்தி படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா! பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய ‘லால் சிங் சத்தா’

உதயநிதி வெளியிட்ட லால் சிங் சத்தா படம் ரிலீசானதில் இருந்தே நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், அப்படத்தின் வசூலும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. இதனால் முதல் நாளை விட அப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் மரண அடி வாங்கி உள்ளது. மேலும் படிக்க

10:12 AM IST

தங்கம் விலை திடீர் உச்சம்: மீண்டும் சவரன் 39ஆயிரத்துக்கு மேல் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்து, தொடர்ந்து 2வது நாளாக உயர்துள்ளது.  சவரன் மீண்டும் ரூ.39ஆயிரத்தைக் கடந்துள்ளது.விரிவான செய்திகளுக்கு..........

10:07 AM IST

CUET தேர்வில் இணையும் நீட் JEE தேர்வுகள்; ஒரே நாடு, ஒரே தேர்வு - பதறும் மாணவர்கள்!!

தற்போது தனித்தனியாக நடைபெற்று வரும் நீட், JEE தேர்வுகளை CUET தேர்வுடன் யுஜிசி திட்டமிட்டு இருப்பதாக வெளியாகும் செய்திகளால் மாணவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க

9:53 AM IST

டுவிட்டரில் இணைந்ததும் விக்ரம் வெளியிட்ட மாஸ் அப்டேட்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விக்ரம், தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார். அதில் தான் அடுத்ததாக நடிக்க உள்ள பா.இரஞ்சித் படத்தின் அப்டேட்டையும் அவர் வெளியிட்டு உள்ளார். மேலும் படிக்க

9:53 AM IST

கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி: வங்கிக் கடன் வசூலிப்போருக்கு கடிவாளம் போட்ட ரிசர்வ் வங்கி

வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் கடன் வசூலிப்பு நிறுவனங்களுக்கு பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை ரிசர்வ்வங்கி பிறப்பித்துள்ளது. விரிவான செய்திகளுககு.........

9:49 AM IST

தமிழக அரசுக்கு அதிகாரம்.. நில அபகரிப்பு, மோசடி , ஆள்மாறாட்டம் செய்து பதிவு செய்தால்.!! வருகிறது புதிய சட்டம்

மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நில அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு  சொத்துக்களை உரியவர்களுக்கு பெற்றுத்தரும் வரலாற்று சிறப்பு மிக்க இச்சட்ட திருத்தம் கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக வணிகம் மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

9:28 AM IST

தென்காசி துப்பாக்கியால் சுட்டு எஸ்எஸ்ஐ தற்கொலை

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் துப்பாக்கியால் சுட்டு எஸ்எஸ்ஐ பார்த்திபன் தற்கொலை செய்துள்ளார். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

8:42 AM IST

இந்தியராக இருப்பதில் ஆசிர்வதிக்கப்பட்டவன்: தோனியின் இன்ஸ்டாகிராமில் profile picture-ஆக தேசியக் கொடி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமாகிய எம்எஸ் தோனி, தனது இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் பிட்சராக தேசியக் கொடியை வைத்துள்ளார் விரிவான செய்திகளுக்கு

8:17 AM IST

நடிகர் விஜய்யின் வீட்டு முன் ஜொலிக்கும் தேசியக்கொடி மின் அலங்காரம்

நீலாங்கரையில் நடிகர் விஜய்யின் வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள மரம் ஒன்று மூவர்ண கொடியை போல் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளால் ஜொலிக்கின்றது. நடிகர் விஜய்யின் வீடு அமைந்துள்ள தெருவின் முனையில் இவ்வாறு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.மேலும் படிக்க

7:44 AM IST

சர்வதேச காத்தாடி திருவிழா.. மாமல்லபுரத்தில் இன்று தொடக்கம்.. Ocean View- யில் பிரம்மாண்ட ஏற்பாடு..

செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா இன்று தொடங்குகிறது. மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவில், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 அணிகள் கலந்து கொள்கின்றன. மேலும் படிக்க

7:37 AM IST

அடேங்கப்பா... முதல் நாளிலேயே அந்த படத்தை விட மூன்று மடங்கு அதிக வசூல் - பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் விருமன்

விருமன் படத்திற்கு ஏ செண்டர் ஆடியன்ஸிடம், சற்று கலவையான விமர்சனங்களே கிடைத்தாலும், பி மற்றும் சி செண்டரில் படம் பட்டைய கிளப்பியது. அதுமட்டுமின்றி கார்த்தியின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் விருமன் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க

7:31 AM IST

பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் பாய்ந்தது: மத்திய அரசு அதிரடி

பருப்பு விலை தொடர்ந்து உயர்ந்துவருவதையடுத்து, பதுக்கலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் பருப்பு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. விரிவான செய்திகளுக்கு............

7:11 AM IST

வீர மரணமடைந்த இராணுவ வீரனின் உடல் - இன்று சொந்த ஊர் வருகை

ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் லட்சுமணனின் உடல் இன்று சொந்த ஊர் வருகிறது. பயங்கரவாதிகளுடனான சண்டையில் வீரமரணமடைந்த வீரன் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான மதுரையில் உள்ள டி.புதுப்பட்டிக்கு கொண்டு வரப்படுகிறது.

7:06 AM IST

உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரணம் திட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

உப்பு உற்பத்தி இல்லாத காலங்களில் உப்பள தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆண்டுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தற்போது அயோடின்‌ கலந்த கல்‌ உப்பு மற்றும்‌ அயோடின்‌ கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள்‌ உப்பு ஆகியவற்றினை நெய்தல் எனும் பெயரில்‌ வெளிச்‌ சந்தை விற்பனையை முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ தொடக்கி வைத்துள்ளார்.மேலும் படிக்க

 

7:04 AM IST

தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை.. சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இன்று முதல் தொடர்ந்து 3 நாள் விடுமுறை என்பதால் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல வாய்ப்புள்ளதால, சென்னையிலிருந்து வெளி மாவட்டத்திற்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மேலும் படிக்க

7:03 AM IST

Salman Rushdie: கத்திக்குத்தில் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்பார்வையை இழக்கலாம்: வென்டிலேட்டரில் தீவிர சிகிச்சை

நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியதையடுத்து அவருக்கு ஒரு கண்பார்வை பறிபோகலாம் என சர்வதேச செய்தி நிறுவனமான ஏபி தெரிவித்துள்ளது.விரிவான செய்திகளுக்கு..........

9:56 PM IST:

ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இதை அடுத்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவை விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க...

9:16 PM IST:

இந்த பேட்டியின் போது செய்தியாளர் ஒருவர் வரிசையாக கேள்வி கேட்க, இதனால் கோபமடைந்தார் சீமான். அப்போது சீமான் செய்தியாளரை, டே மண்டையை உடைத்து விடுவேன்டா ராஸ்கல்’ என்று திட்டியுள்ளார்.

மேலும் படிக்க

8:34 PM IST:

காரில் ஏறி புறப்பட்ட நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பிஜேபியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் தனது செருப்பை எரிந்துள்ளார். சிலர் காரை வழிமறித்து தாக்கியுள்ளனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்தினர்.

மேலும் படிக்க

8:13 PM IST:

அஞ்சலி நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து பிடிஆர் சென்ற பொது கூட்டத்தில் இருந்த சிலர் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசினர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க

5:39 PM IST:

கோபமடைந்த பாஜகவினர் , ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசினர்.

மேலும் படிக்க

6:34 PM IST:

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் நகை மற்றும் பணம் மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வங்கிக்குள் பட்டப்பகலில் நுழைந்த மர்ம நபர்கள், வங்கியின் மேலாளர் மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு வங்கியில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கியில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிங்க...

3:37 PM IST:

மறைந்த  ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  மற்றும்  மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க

3:35 PM IST:

தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்   3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணனும் ஒருவர்.

மேலும் படிக்க

3:17 PM IST:

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருகிற 15-ந் தேதி, ஜாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல், நாம எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு, ஒரு 2 அல்லது 3 அடி நீளம் கொண்ட கம்பில் நமது நாட்டின் தேசிய கொடியை கட்டி, நம் வருங்கால சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் கையால நம் வீட்டின் முன் அந்த கொடியை பறக்கவிட்டு, நாம் பெருமைகொள்வோம் என ரஜினி கூறி உள்ளார். மேலும் படிக்க

2:35 PM IST:

இபிஎப்ஓ சந்தாதாரர்கள் வீட்டிலிருந்தே படியே தங்களுடைய யுஏஎன்(UAN) எண்ணை ஆன் லைன் மூலம் சில நிமிடங்களில் பெறலாம். இதன் மூலம் பிஎப் கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் பெற முடியும்.விரிவான செய்திகளுக்கு

2:34 PM IST:

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சயத் சலாலுதீன் மகன் சயத் அப்துல் முயீத், சிறையில் இருக்கும் பிரிவினைவாதத் தலைவர் பிட்டா கராத்தே மனைவி உள்பட 4 பேர் ஜம்மு காஷ்மீர் அரசுப்பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.விரிவான செய்திகளுக்கு

2:34 PM IST:

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களையும் பிரம்மாண்டமாக தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் படிக்க

2:08 PM IST:

தூக்கத்தை கெடுத்த ஒன்றரை வயது மகனை தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் திடீரென அடங்கியாதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்ததில் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சில நேரங்களில் மனிதர்கள் விலங்குகளை விட கொடூரமாக நடந்து கொள்கின்றனர். மேலும் படிக்க

2:07 PM IST:

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட  ராஜநாகம், மலைப்பாம்பு, ஆமை, குரங்கு குட்டி போன்றவை மீண்டும் அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.நேற்றிரவு தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட கோடிய விஷ ஜந்துக்கள் கடந்திவரப்பட்ட நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் இந்நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேலும் படிக்க

 
 

2:06 PM IST:

கோவையில் உள்ள கடைகளில் மாநகராட்சி ஊழியர்கள் தேசியக்கொடியினை 25 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டுமென நிர்ப்பந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கொடியை வாங்கிக் கொள்ளாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் கடைகாரர்களை மிரட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளத்தில் பரவியுள்ளதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் படிக்க
 

2:05 PM IST:

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியதுடன்  உடல் ரீதியான பாலியல் சீண்டலில்  தமிழ் ஆசிரியர் ஈடுபட்டுவந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில்  அந்த ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் படிக்க

 
 

2:03 PM IST:

தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்த வந்த போது அவரது கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அமைச்சரின் காரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
 

1:41 PM IST:

75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது. ஓர் ஆண்டுக்கு மொத்தமாக ரூ.2,999க்கு ரீசார்ஜ் செய்தால், ரூ.3 ஆயிரத்துக்கான இலவசங்களை அளிக்கிறது.விரிவான செய்திகளுக்கு

12:55 PM IST:

காங்கிரஸ் தலைவர் சோனியாா கந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம்தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் 2வது முறையாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

12:54 PM IST:

நடிகர் கார்த்தியின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்கிற புதிய சாதனையை விருமன் படைத்துள்ளது. இதற்குமுன் சுல்தான் படம் ரூ.5 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது விருமன் அதனை முறியடித்துள்ளது.மேலும் படிக்க

12:36 PM IST:

மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி காப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தாரர்கள் பொறியியல் மற்றும் தொழில்நூட்ப பட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலும் படிக்க

11:39 AM IST:

நெட்பிளிக்ஸில் இலவசமாக சந்தாவாய்ப்பு தேவை என நினைப்போருக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பல அருமையான சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு........

11:38 AM IST:

947 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார் சல்மான் ருஷ்டி. இவரது தந்தை கேம்பிரிட்ஜில் படித்த வழக்கறிஞர் ஆவார். அதுமட்டுமல்ல பிரபல வர்த்தகராகவும் இருந்துள்ளார். மும்பையில் தனியார் பள்ளியிலும், பின்னர் இங்கிலாந்தின் வார்விக் - ஷயரில் உள்ள உறைவிடப் பள்ளியிலும் படித்த இவர், கிங்ஸ் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.மேலும் படிக்க

11:16 AM IST:

நாட்டின் 75-வது சுதந்திரதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பும்,தனது சமூக ஊடக கணக்கில் சுயவிவரப் படம்(profile picture) தேசியக் கொடியை வைத்தது. விரிவான செய்திகளுக்கு........

11:01 AM IST:

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிவரஞ்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நெல் ஜெயராமனுக்கு பின் பல மாநிலங்களுக்கு சென்று 1,250 பாரம்பரிய நெல் ரகத்தை சிவரஞ்சனி மீட்டெடுத்துள்ளார்.

11:00 AM IST:

புது டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க

10:39 AM IST:

உதயநிதி வெளியிட்ட லால் சிங் சத்தா படம் ரிலீசானதில் இருந்தே நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், அப்படத்தின் வசூலும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. இதனால் முதல் நாளை விட அப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் மரண அடி வாங்கி உள்ளது. மேலும் படிக்க

10:12 AM IST:

தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்து, தொடர்ந்து 2வது நாளாக உயர்துள்ளது.  சவரன் மீண்டும் ரூ.39ஆயிரத்தைக் கடந்துள்ளது.விரிவான செய்திகளுக்கு..........

10:07 AM IST:

தற்போது தனித்தனியாக நடைபெற்று வரும் நீட், JEE தேர்வுகளை CUET தேர்வுடன் யுஜிசி திட்டமிட்டு இருப்பதாக வெளியாகும் செய்திகளால் மாணவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க

9:53 AM IST:

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விக்ரம், தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார். அதில் தான் அடுத்ததாக நடிக்க உள்ள பா.இரஞ்சித் படத்தின் அப்டேட்டையும் அவர் வெளியிட்டு உள்ளார். மேலும் படிக்க

9:53 AM IST:

வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் கடன் வசூலிப்பு நிறுவனங்களுக்கு பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை ரிசர்வ்வங்கி பிறப்பித்துள்ளது. விரிவான செய்திகளுககு.........

9:49 AM IST:

மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நில அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு  சொத்துக்களை உரியவர்களுக்கு பெற்றுத்தரும் வரலாற்று சிறப்பு மிக்க இச்சட்ட திருத்தம் கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக வணிகம் மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

9:28 AM IST:

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் துப்பாக்கியால் சுட்டு எஸ்எஸ்ஐ பார்த்திபன் தற்கொலை செய்துள்ளார். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

8:42 AM IST:

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமாகிய எம்எஸ் தோனி, தனது இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் பிட்சராக தேசியக் கொடியை வைத்துள்ளார் விரிவான செய்திகளுக்கு

8:17 AM IST:

நீலாங்கரையில் நடிகர் விஜய்யின் வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள மரம் ஒன்று மூவர்ண கொடியை போல் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளால் ஜொலிக்கின்றது. நடிகர் விஜய்யின் வீடு அமைந்துள்ள தெருவின் முனையில் இவ்வாறு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.மேலும் படிக்க

7:44 AM IST:

செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா இன்று தொடங்குகிறது. மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவில், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 அணிகள் கலந்து கொள்கின்றன. மேலும் படிக்க

7:37 AM IST:

விருமன் படத்திற்கு ஏ செண்டர் ஆடியன்ஸிடம், சற்று கலவையான விமர்சனங்களே கிடைத்தாலும், பி மற்றும் சி செண்டரில் படம் பட்டைய கிளப்பியது. அதுமட்டுமின்றி கார்த்தியின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் விருமன் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க

7:31 AM IST:

பருப்பு விலை தொடர்ந்து உயர்ந்துவருவதையடுத்து, பதுக்கலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் பருப்பு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. விரிவான செய்திகளுக்கு............

7:11 AM IST:

ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் லட்சுமணனின் உடல் இன்று சொந்த ஊர் வருகிறது. பயங்கரவாதிகளுடனான சண்டையில் வீரமரணமடைந்த வீரன் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான மதுரையில் உள்ள டி.புதுப்பட்டிக்கு கொண்டு வரப்படுகிறது.

7:06 AM IST:

உப்பு உற்பத்தி இல்லாத காலங்களில் உப்பள தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆண்டுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தற்போது அயோடின்‌ கலந்த கல்‌ உப்பு மற்றும்‌ அயோடின்‌ கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள்‌ உப்பு ஆகியவற்றினை நெய்தல் எனும் பெயரில்‌ வெளிச்‌ சந்தை விற்பனையை முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ தொடக்கி வைத்துள்ளார்.மேலும் படிக்க

 

7:04 AM IST:

இன்று முதல் தொடர்ந்து 3 நாள் விடுமுறை என்பதால் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல வாய்ப்புள்ளதால, சென்னையிலிருந்து வெளி மாவட்டத்திற்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மேலும் படிக்க

7:03 AM IST:

நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியதையடுத்து அவருக்கு ஒரு கண்பார்வை பறிபோகலாம் என சர்வதேச செய்தி நிறுவனமான ஏபி தெரிவித்துள்ளது.விரிவான செய்திகளுக்கு..........