செயல்வீரர்கள் கூட்டம்.. இன்று காலை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற விழா - தலைமை உரை ஆற்றிய அண்ணாமலை!
BJP Leader Annamalai : இன்றைய தினம், தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், அணி, பிரிவு நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட செயல் வீரர்கள் கூட்டம், சோழிங்கநல்லூரில் நடைபெற்றது.
![Tamil Nadu BJP Leader K Annamalai Participated in function held in Chozinganallur ans Tamil Nadu BJP Leader K Annamalai Participated in function held in Chozinganallur ans](https://static-ai.asianetnews.com/images/01hkz61r3ezhzx7w4f68w3b2z8/k-annamalai_363x203xt.jpg)
இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் திரு கு. அண்ணாமலை அவர்கள் எழுச்சிமிகு தலைமை உரை ஆற்றினார். பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் கரு. நாகராஜன், இணை அமைப்பாளர் கராத்தே தியாகராஜன், பொறுப்பாளர் பி. பாஸ்கர், மாவட்டத் தலைவர்கள் வே. காளிதாஸ், கே.எம். சாய்சத்யன், மாநிலத் துணைத்தலைவர்கள் வி.பி. துரைசாமி, நாராயணன் திருப்பதி, டால்பின் ஸ்ரீதர், மாநில செயலாளர் எஸ். ஜி. சூர்யா, பிரமிளா சம்பத் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், மாமன்ற உறுப்பினர் லியோ சுந்தரம், மாலா செல்வகுமார் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜகவின் வெற்றித்தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல இன்றைய தினம், மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், அணி, பிரிவு நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட செயல் வீரர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உற்சாகத்துடன் நடைபெற்றது என்பதும் குறிபிடத்தக்கது. இந்த இரு நிகழ்வுகளிலும் தமிழாக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அவர்கள் கலந்துகொண்டார்.
இந்த சூழலில் என் மன் என் மக்கள் யாத்திரை இன்று தனது 150வது தொகுதியாக ஓசூ பகுதிக்குள் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி, இராமேஸ்வரத்தில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்களால் இந்த யாத்திரை துவங்கி வைக்கப்பட்டது.