Asianet News TamilAsianet News Tamil

நடிகை கீதா கால்வாயில் இருந்து காப்பாற்றிய குழந்தை சுதந்திரன்! சமூக நலத்துறையிடம் ஒப்படைப்பு!

சென்னை வளசரவாக்கத்தில் கடந்தமாதம் சுதந்திர தினத்தன்று பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை யாரோ தொப்புள் கொடி கூட வெட்டப்படாத நிலையில் கால்வாயில் வீசி சென்றனர். 

 

சென்னை வளசரவாக்கத்தில் கடந்தமாதம் சுதந்திர தினத்தன்று பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை யாரோ தொப்புள் கொடி கூட வெட்டப்படாத நிலையில் கால்வாயில் வீசி சென்றனர். 

குழந்தையின் முனுங்கல் சத்தம் கேட்ட சீரியல் துணை நடிகை கீதா என்பவர், குழந்தையை காப்பாற்றினார்.  

பின் காவல்த்துறை மூலமாக சென்னை எழும்பூர்  குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தார், அப்போது அந்த குழந்தைக்கு சுதந்திரன் என பெயரிடப்பட்டது. மேலும் குழந்தையை காப்பாற்றிய கீதாவுக்கு அனைவர் மத்தியிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தது.  

பின் கீதா "அரசாங்கம் அனுமதி தந்தால் அந்த குழந்தையை தானே 
வளர்க்க ஆசைப்படுவதாக  தெரிவித்திருந்தாார். இந்நிலையில் தற்போது அந்த குழந்தை எடை கூடி, நல்ல நலமுடன் உள்ளதால், குழந்தை , சுகாதார துறையில் இருந்து சிகிச்சை முடிந்த பின் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தொண்டு நிறுவனத்திடம் குழந்தையை ஒப்படைத்தனர். இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். 


 

Video Top Stories