Asianet News TamilAsianet News Tamil

வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும்… மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த முதன்மை கல்வி அலுவலர்!!

மழை விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னையில் வரும் சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

all schools will function coming saturday
Author
First Published Dec 1, 2022, 9:07 PM IST

மழை விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னையில் வரும் சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அந்த அறிவிப்பின் போதே அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: தீண்டாமையைக் கடைப்பிடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… விசிக எ.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்!!

அதன்படி வரும் சனிக்கிழமை (03.12.2022) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், தொடர் பெருமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மாநகரப் பேருந்தில் நடத்துநரை தாக்கிய பெண் பயணி… வீடியோ வெளியானதால் பரபரப்பு!!

அப்பணி நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள்கிழமை பாட வேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios