8ம் வகுப்பு மாணவிக்கு 64 வயது ஆசிரியர் செக்ஸ் டார்ச்சர்......வீட்டிற்க்கே சென்று செய்த கொடுமை...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், அரசு பள்ளியில் படித்து வரும் 8ம் வகுப்பு மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி விடுதியிலிருந்து தனது வீட்டிற்கு சென்று விட்டுள்ளார்.
அப்போது, கூலித் தொழிலாளர்களான சிறுமியின் பெற்றோர்கள் வெளியே செல்லும் வரை கண்காணித்திருந்த அந்த ஓய்வு பெற்ற வயது ஆசிரியர் ராமலிங்கம் அந்த சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து, சிறுமிக்கு பாலில் தொல்லை கொடுத்துள்ளார். வயதான இந்த ஆசிரியரின் செயலால் ஒன்றுமே புரியாத அந்த சிறுமி அதிர்ச்சியில் அலறியடித்து கத்தியுள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கம் வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருந்ததை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து ராமலிங்கத்திடம் இருந்து சிறுமியை மீட்டனர்.
இதனையடுத்து தகவல் அறிந்த வீட்டிற்கு வந்த சிறுமியின் தாயார், தனது பெண்ணுக்கு ஆசிரியரால் நடந்த கொடுமையால் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார். பிறகு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளி்த்தார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர்.