உலக கோப்பை போட்டியை இதுவரை 10 இலட்சம் காண வந்துள்ளனர் - பிபா அறிவிப்பு...
இதுவரை நடந்துள்ள உலக கோப்பை போட்டியை நேரில் காண வந்தவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டியுள்ளது என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) தெரிவித்துள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இதுவரை 21 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. அதாவது கடைசியாக டென்மார்க் – ஆஸ்திரேலியா மோதிய ஆட்டம் வரை.
இந்தப் போட்டியை நேரில் காண வந்தவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டியுள்ளது என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அறிவித்துள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஒவ்வொரு ஆட்டத்தையும் காண ஸ்டேடியத்திற்கு 97 சதவீத ரசிகர்கள் வருகை தருகின்றனர்.
உலகம் முழுவதும் இதுவரை 26 இலட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இறுதிப்போட்டி நடக்கும் ஜூலை 15–ஆம் தேதி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும்" என்று தெரிவித்துள்ளது.