Asianet News TamilAsianet News Tamil

சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.. ராஜீவ் காந்தியை விமர்சிக்க அருகதை கிடையாது.. எகிறி அடித்த ஜோதிமணி!

சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன், தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது.

Seeman is a sex offender .. Jyoti Mani attacked Seeman!
Author
Chennai, First Published May 21, 2022, 9:44 PM IST

சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை மே 18 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன் விடுதலைக்கு தாங்கள்தான் காரணம் என்று திமுக, அதிமுக உள்பட பல கட்சிகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் பேரறிவாளன் விஷயத்தில் என்ன செய்தது என்று கூற முடியுமா? ஜெயலலிதாவது ஏதாவது தீர்மானம் ஏற்றினார்கள். ஆனால் கருணாநிதி ஆட்சியில்  நளினியை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைத்துவிட்டு மற்ற மூன்று பேரை தூக்கில் போட அனுமதித்தது. இந்த விஷயத்தில் சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்றது பேரறிவாளன்தான். 

Seeman is a sex offender .. Jyoti Mani attacked Seeman!

பேரறிவாளனே சட்டங்களை படித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து இந்த வழக்கை முடித்து வென்றுள்ளார். வழக்கறிஞர்கள் பிரபு, பாரி இருவரும்தான் அவருக்காக வழக்கை வாதாடி முன்னெடுத்தார்கள். ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? அவர்தானே ரூ. 400 கோடி பீரங்கி ஊழல் செய்தவர். ஒரு ராணுவத்தை அனுப்பி 26,000 பேரை அழித்தவர் அவர்தான்” என்று கடுமையாக சாடிப் பேசியிருந்தார். மறைந்த முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காங்கிரஸார் அவருடைய நினைவு நாளை கடைப்பிடித்து வரும் நிலையில், சீமான் இவ்வாறு பேசியிருந்தார். 

Seeman is a sex offender .. Jyoti Mani attacked Seeman!

சீமானின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜோதிமணி பதிவிட்டுள்ளார். அதில், “ சீமான் ஒரு பாலியல் குற்றவாளி. சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன், தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது” என்று ஜோதிமணி பதிலடி கொடுத்திருக்கிறார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios