Asianet News TamilAsianet News Tamil

பொண்டாட்டி லெஃப்ட் சைடு- கள்ளக்காதலி ரைட்சைடு... நடுவில் படுக்கும் திமுக நகர செயலாளரை காப்பாற்றும் துரைமுருகன்

கள்ளக்காதலி விவகாரத்தில் வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதிகுமாரை காப்பாற்றக் கோரி அக்கட்சி பொருளாளர் துரைமுருகனிடம் முறையிடும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Duramurugan defends DMK city secretary
Author
Tamil Nadu, First Published Feb 26, 2020, 11:59 AM IST

கள்ளக்காதலி விவகாரத்தில் வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதிகுமாரை காப்பாற்றக் கோரி அக்கட்சி பொருளாளர் துரைமுருகனிடம் முறையிடும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்து கொண்டு கும்மாளம் அடிக்கும் கணவர் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் புகார் கூறியதால், கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என திமுக நிர்வாகியின் மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.Duramurugan defends DMK city secretary

சென்னை அடையார் பகுதியை சேர்ந்த ரம்யாவுக்கும் வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதிகுமாருக்கும் கடந்த 2016-ம் பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், என்னை திருமணம் செய்வதற்கு முன் சாரதிகுமார் சேலத்தில் சட்ட கல்லுாரியில் சேர்ந்துள்ளார். அப்போது, அவரை விட 15 வயது மூத்த பெண் சத்யபிரியா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மேலும், மனைவிக்கு திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுத்த நகையை அபகரித்து கள்ளக் காதலியிடம் கொடுத்தார்.

தான் மகப்பேறு காலத்தில் தான் தாய் வீட்டிற்கு சென்றிருந்தபோது அந்த பெண்ணை வீட்டிற்கே அழைத்து வந்துள்ளதாக கணவர் மீது ரம்யா குற்றம்சாட்டினார். இது குறித்து திமுக தலைமையிடம் புகார் அளித்ததாகவும், இதனால் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். மேலும், தனது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.  வீட்டில் படுக்கும்போது வலது புறம்நானும், இடது புறம் கள்ளக்காதலியையும் படுக்க வைத்து விட்டு நடுவில் அவர் படுத்துக் கொள்வார். அப்போது கள்ளக்காதலியை தான் கட்டிப்பிடிப்பார்.

Duramurugan defends DMK city secretary

என் கணவருக்கு, சத்யபிரியா மட்டுமின்றி, வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருப்பதால், காஞ்சிபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டேன். நடவடிக்கை உயிருக்கு பயந்து தற்போது சென்னை அடையாறில் உறவினர் வீட்டில் தங்கி உள்ளேன். இதையடுத்து, என் கணவர், தாலியை கழற்றி கொடுக்குமாறு, கழுத்தில் கத்தியை வைத்து, கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.

 Duramurugan defends DMK city secretary

இது குறித்து வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதிகுமாரிடம் கேட்டபோது, தனக்கும் தனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரிய வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், வழக்கு முடியும் தருவாயில் இருப்பதால், அதிக பணம் பெறுவதற்காகவே இந்த குற்றச்சாட்டை கூறி வருவதாக தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் சாரதிகுமாரின் ஆதரவாளர்கள் திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திற்கு சென்று ’சாரதியை கைவிட்டு விடாதீர்கள். அவருக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுங்கள்’எனக் கோரிக்கை வைக்கின்றனர். அதற்கு துரைமுருகன், ‘அவன் நல்லது செய்கிறானோ, கெட்டது செய்கிறானோ... அதெல்லாம் எனக்குத் தெரியாது. சாரதிகுமார் எனக்கு வேணும்’ எனக் கூறுகிறார். இந்த வீடியோ லீக்காகி அதிர்ச்சி அளித்து வருகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios