வசமாக சிக்கிய ரவுடி பேபி சூர்யா...கைதுக்கு பிறகு நடந்தது என்ன? கவர்ச்சி கன்னி மீது குண்டர் சட்டம் பாய்கிறதா.?
ஆபாச வழக்கில் கைதான, சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆபாச வழக்கில் கைதான, சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிக் டாக் புகழ், கவர்ச்சி கன்னி என்றெல்லாம் சமூக வலைதளத்தில் பிரபலம் அடைந்தவர் ரவுடி பேபி சூர்யா. இவர் அடிக்கடி ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். டிக் டாக்கில் திரை இசை பாடல்களுக்கு நடனமாடியும், ரியாக்ஷன்களாலும் லைக்ஸ் அள்ளிய சூர்யா போகப்போக கொஞ்சம் கவர்ச்சியை காட்டி ஃபாலோயர்களை அள்ளினார்.
இவர், கவர்ச்சி எல்லை மீறியதும் கமெண்ட்கள் ஆபாசமாக வரத் தொடங்கியது. ஆரம்பத்தில் கலக்கல் ராணியாக இருந்த சூர்யா அதன்பின் ஆபாச நாயகியாக அவதாரம் எடுத்தார். மேலும், தன் சொந்தப் பிரச்னைகளையும் வீடியோக்கள் மூலம் கொட்டத் தொடங்கினார். ரவுடி பேபி சூர்யாவுடன் ஆரம்பத்தில் டூயட் பாடிய டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து இடையே முட்டல் மோதல்கள் வெடிக்கத் தொடங்கியது. இதில் கடுப்பான ஜி.பி. முத்து ரவுடி பேபியை கழற்றி விட்டு சென்றார்.
இவருடைய அட்டகாசம் தாங்க முடியாமல், இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் பெண்கள் குழு ஒன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அவரது, பேச்சுக்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் குறித்து ரவுடி பேபி சூர்யா ஆபமாக தகாத முறையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் கடந்த ஜனவரி 4 -ம் தேதி சைபர் கிரைம் போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் சுப்புலட்சுமி என்ற சூர்யாவையும் சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். ஆபாசமாக பேசி அவதூறு செய்த வழக்கில் டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவும் அவருடைய நண்பர் சிக்காவும் ஜோடியாககுண்டர் சட்டம் பாய்வது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.