Asianet News TamilAsianet News Tamil

விடைத்தாளில் செக்ஸ் ஆசைகளை எழுதிய +2 மாணவன் - அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியை!!

student wrote sexual fantasies in exam paper
student wrote sexual fantasies in exam paper
Author
First Published Jun 13, 2017, 2:54 PM IST


குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் பிளஸ்-டூ வேதியியல் தேர்வில் மாணவர் ஒருவர் தனது அண்ணி, வீட்டு வேலைக்காரி, நடிகை குறித்த பாலியல் ஆசைகளை மிக மோசமாக எழுதி இருந்தார். இதைக் கண்டு தேர்வுத்தாளை திருத்திய பெண் ஆசிரியை கடும் அதிர்ச்சி அடைந்தார்.

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் பிளஸ்-டூ, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. இதில் தேர்வுத்தாள் திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த மாதம் 30-ந்தேதி பிளஸ்-டூ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மாணவர்கள் 48சதவீதமும் , மாணவிகள் 70 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் பிளஸ்டூ வேதியியல் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் விடைத்தாளில் கேள்விக்கு பதில் எழுதுவதற்கு பதிலாக, மிக மோசமாக, வக்கிரமாக தனது பாலியல் ஆசைகளை எழுதியுள்ளார். தனது அண்ணன் மனைவி, வீட்டு வேலைக்காரி, சில நடிகைகள் மீதான தனது பாலியல் ஆசைகளை சொல்லமுடியாத அளவுக்கு கீழ்த்தரமாக அந்த மாணவர்கள் விடைத்தாளில் எழுதியுள்ளார்.

இந்த விடைத்தாளை திருத்திய பெண் ஆசிரியை ஒருவர் பார்த்து அதிர்ச்சிஅடைந்து, அது குறித்து விடைத்தாள் திருத்தும் அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, தேர்வு சீரமைப்புக்குழு முன் அந்த மாணவர் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து குஜாராத் உயர்கல்வித்துறை தலைவர் ஏ.ஜே. ஷா கூறுகையில், “ விடைத்தாளில் மிக மோசமாக, கீழ்த்தரமாக எழுதிய  அந்த மாணவர் அடையாளம் காணப்பட்டு அவர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அடுத்து ஒரு ஆண்டுக்கு தேர்வு எழுதவும் தேர்வு விதிக்கப்பட்டுள்ளது. அவரின் ேதர்வு முடிவுகளையும் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உளவியல் ரீதியாக சிகிச்சை அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios