Asianet News TamilAsianet News Tamil

தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த உறவினர்... நேரில் பார்த்ததால், செதில் செதிலாக வெட்டிய மகன்!

mother sex with relative murdaer in son
mother sex with relative murdaer in son
Author
First Published Apr 20, 2018, 12:31 PM IST | Last Updated Sep 19, 2018, 2:16 AM IST


தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கல்யானமானவரை மூன்று இளைஞர்கள் கத்தியால் செதில் செதிலாக கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 17ம் தேதி பாபா பீர் மஜார் பகுதியில் வெட்டு காயங்களுடன் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக துவாரகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை மீட்டு ஹரி நகரில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

டெல்லியின் துவாரகா பகுதியில் நடைபெற்ற இந்த கொலையில்  தொடர்புடையதாக மூன்றுபேரை  போலீசார்  கைது செய்துள்ளனர். விசாரணையில், உயிரிழந்தவர் ராஜூ என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலையில் கைது செய்யப்பட்டுள்ள மூவரில் அமன் என்பவனுக்கு தொடர்பு இருக்கலாம் என இறந்தவரின் குடும்பத்தார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அமன் தாயாருடன் இறந்த நபர் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது..

இது குறித்து விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜூ அமனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அமனின் தாயுடன் தனிமையில் இருந்துள்ளார் அப்போது இருவரும் தனியில் இறந்ததைக் கண்ட அமன் ராசுவை கடுமையாக திட்டியிருக்கிறார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜூ தனது வீட்டிற்கு வந்து செல்வது பற்றி மகன் கண்டித்துள்ளார். இதனையடுத்து கோபமடைந்த மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜூவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அதன்பின் மூவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், ராஜூ தனது வீட்டிற்கு வந்து தனது தாயாருடன் நெருங்கி பழகியது அமனுக்கு பிடிக்கவில்லை. இதனால் வீட்டிற்கு வரகூடாது என்று பலமுறை அமன், ராஜூவை திட்டியிருக்கிறார்.

ஆனாலும், தொடர்ந்து ராஜூ வந்துள்ளார். கடைசியாக அமனின் வீட்டிற்கு வந்த ராஜு அமனின் தாயுடன் தனிமையில் உள்ள்சமாக இருந்தபோது பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமன் கொலை செய்யும் அளவுக்கு துணிந்துள்ளார். இதற்காக தனது கூட்டாளிகளுடன் திட்டம் தீட்டி நேற்று முன்தினம் ராஜூவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார் அவரது உடலில் உடலில் 22 வெட்டு காயங்கள் இருந்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios