ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தது இதற்காகவா? கல்யாண நாளில் பகீர் ரகசியத்தை வெளியிட்ட அபிஷேக் பச்சன்
முன்னாள் பிரபஞ்ச அழகியான ஐஸ்வர்யா ராயை எதற்காக திருமணம் நான் செய்தேன்? பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரபஞ்ச அழகியான பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை 11 ஆணுடுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதுவரை கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனைகள் என செய்திகள் வந்தாலும் இந்த ஜோடி கண்டுகொள்வது இல்லை, இருவரும் சந்தோஷமாக இருப்பதாகவே வெளியுலகதிக்கு காட்டிக் கொண்டனர்.
இந்நிலையில் தனது காதல் மனைவி ஐஸ்வர்யா பற்றி அபிஷேக் பச்சன் முன்னணி தொலைகாட்சி பேட்டியொன்றில் கூறியதாவது; ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்பதால் அவரை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஐஸ்வர்யா ராய் அழகை அடிப்படையாக கொண்டது அல்ல எங்களின் திருமண உறவு. அவர் ஒரு பிரபலமான நடிகை என்பதாலும் திருமணம் செய்யவில்லை.
மேக்கப் இல்லாத ஐஸ்வர்யா ராயை பிடிக்கும். எனது மனைவி நல்ல குணத்திற்காக அவரை திருமணம் செய்தேன். என் மனைவியை பார்த்து மக்கள் விசில் அடிப்பது எனக்கு பழகிப் போய்விட்டது. நான் அவரை கவர ஒருநாளும் விசில் அடித்ததே கிடையாது.திருமணம் முடிந்த புதிதில் புதுப்பெண் கணவருக்கு ஏதாவது சமைத்துக் கொடுக்க வேண்டும். ஐஸ்வர்யா எனக்கு அல்வா செய்து கொடுத்தார்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அல்வா அருமையாக இருந்தது என்றார் அபிஷேக் பச்சன். திருமணமாகிவிட்டதால் நாங்கள் தனிக்குடித்தனம் செல்ல செல்லவில்லை. என் பெற்றோர்களுடன் எங்களது பங்களாவான ஜல்சாவில் இருப்பது தான் எனக்கு நிம்மதி சந்தோஷம் என அபிஷேக் கூறியுள்ளார்.