- Home
- உடல்நலம்
- Health Facts: சிகரெட் பிடிக்கும் எல்லாருக்கும் ஏன் கேன்சர் வருவதில்லை? ஆய்வில் ஆச்சரியத் தகவல்!
Health Facts: சிகரெட் பிடிக்கும் எல்லாருக்கும் ஏன் கேன்சர் வருவதில்லை? ஆய்வில் ஆச்சரியத் தகவல்!
Health Facts: சிகரெட் பிடிக்கும் அனைவருக்கும் ஏன் கேன்சர் வருவதில்லை? என்ற கேள்வி பொதுவாக எழும்பும். இதற்கு கேம்பிரிட்ஜ் ஆய்வில் ஆச்சரியமான சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

சிகரெட் பிடிக்கும் எல்லாருக்கும் ஏன் கேன்சர் வருவதில்லை?
புகைப்பழக்கம் நுரையீரல் புற்றுநோய்க்கு ஒரு முக்கியக் காரணம் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனாலும், நீண்டகாலமாக சிகரெட் பிடிக்கும் எல்லோருக்கும் புற்றுநோய் வருவதில்லை. இந்த வித்தியாசத்துக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்ற கேள்விக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்த ஆய்வின்படி, ஒருவரின் மரபணு அமைப்பு (Genetics), டிஎன்ஏ பாதிப்புக்கு உடல் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மரபணுக்கள் புற்றுநோய் அபாயத்தை எப்படி பாதிக்கின்றன?
சிகரெட் புகையில் உள்ள புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள், டிஎன்ஏ-வை சேதப்படுத்துகின்றன. பொதுவாக, உடலின் செல்கள் இந்த சேதத்தைச் சரிசெய்ய முயற்சிக்கும். ஆனால், எல்லாரிடமும் இந்தத் திறன் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலரிடம் டிஎன்ஏ-வை சரிசெய்யும் அமைப்பு மிகவும் திறமையாகச் செயல்படும், சிலரிடம் அது பலவீனமாக இருக்கலாம். இதனால், புற்றுநோயை உண்டாக்கும் பிறழ்வுகள் ஏற்படும் வாய்ப்பும் நபருக்கு நபர் மாறுபடலாம்.
இதையும் படிங்க:Mineral Water: மினரல் வாட்டரை சூடு பண்ணி குடிக்கிறீங்களா? நல்லதா? கெட்டதா? அறிவியல் சொல்வது என்ன?
கேம்பிரிட்ஜ் ஆய்வில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது?
ஆராய்ச்சியாளர்கள், வெவ்வேறு மரபணு பின்னணியைக் கொண்ட எலிகளிடம் இருந்து சுமார் 600 கட்டிகளைப் பரிசோதித்தனர். எல்லா கட்டிகளின் வளர்ச்சிப் பாதையும் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றில் காணப்பட்ட டிஎன்ஏ பிறழ்வுகள், மரபணுப் பின்னணியைப் பொறுத்து மாறுபட்டிருந்தன. ஒரே அளவில் புகைப்பிடிக்கும் இருவருக்கு புற்றுநோய் அபாயம் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:Heart Attack: மாரடைப்பு திடீரென வருவதில்லை! ஒரு மாதத்திற்கு முன்பே உடல் தரும் 5 எச்சரிக்கை அறிகுறிகள்!
அப்படியென்றால் பாதுகாப்பாக புகைப்பிடிக்கலாமா?
இல்லை. இதை ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். எந்த ஒரு நபரின் மரபணுவும் அவரைப் புகைப்பழக்கத்தில் இருந்து முழுமையாகப் பாதுகாக்கும் என்று சொல்ல முடியாது. புகைப்பழக்கம் நுரையீரல் புற்றுநோயை மட்டுமல்லாமல், COPD (நுரையீரல் சிதைவு நோய்), இதய நோய், பக்கவாதம் மற்றும் பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
எதிர்காலத்தில் புற்றுநோய் பரிசோதனைக்கு இது உதவுமா?
இந்த ஆய்வு, எதிர்காலத்தில் அதிக ஆபத்தில் இருக்கும் நபர்களைக் கண்டறியவும், தனிநபர்களுக்கான பிரத்யேக புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளை உருவாக்கவும் உதவக்கூடும். ஆனால், இதற்காக மனிதர்களிடம் இன்னும் ஆய்வுகள் தேவை.
மருத்துவர்களின் அறிவுரை என்ன?
நிபுணர்களின் கருத்துப்படி, புகைப்பழக்கத்தை விடுவதுதான் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல கொடிய நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள சிறந்த வழி. மரபணுக்கள் ஆபத்தின் அளவைப் பாதிக்கலாம், ஆனால் புகையிலையின் தீங்குகளை முழுமையாகத் தடுக்க முடியாது. எனவே, "பாதுகாப்பான சிகரெட்" என்ற ஒன்று இல்லை என்ற செய்தியை மறந்துவிடக் கூடாது.
புகைப்பிடிப்பதை நிறுத்துவதன் மரபணு நன்மைகள்
நுரையீரல் செல்கள் தங்களைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் அபாரத் திறன் கொண்டவை என்பதை இயற்கை நமக்கு அளித்த வரமாகவே பார்க்கலாம். கேம்பிரிட்ஜ் மற்றும் பிற சர்வதேச ஆய்வுகளின்படி, ஒருவர் புகைப்பழக்கத்தைக் கைவிடும்போது, புகையிலையின் நச்சுகளால் பிறழ்வுடையாத ஆரோக்கியமான செல்கள் மீண்டும் பெருகத் தொடங்குகின்றன.
காலப்போக்கில், இந்த ஆரோக்கியமான செல்கள் புற்றுநோய் அபாயத்தைக் கொண்ட சேதமடைந்த செல்களை மாற்றி, நுரையீரலின் உட்புறத்தைச் சீரமைக்கின்றன. எனவே, எத்துணை ஆண்டுகள் சிகரெட் பிடித்திருந்தாலும், அதை முழுமையாக நிறுத்தும் கணத்திலிருந்து உடலின் மரபணுப் பாதுகாப்பு மண்டலமும், டிஎன்ஏ சீரமைப்புத் திறனும் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்குகின்றன என்பதுதான் அறிவியல் உலகமளிக்கும் மிகப்பெரிய நம்பிக்கையாகும்.

