திடீர் என இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறியது ஏன்? இதான் நடந்தது.. யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த பரபரப்பு விளக்கம்
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடிய, பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா... தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திடீர் என வெளியேறிய நிலையில், இதுகுறித்து தற்போது யுவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
Yuvan Shankar Raja
இசைஞானி இளையராஜாவின் பெயர் சொல்லும் பிள்ளையாக... தமிழ் திரையுலகில் முன்னணி இளம் இசையமைப்பாளராக வளர்ந்து நிற்பவர், யுவன் ஷங்கர் ராஜா. பல முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்துள்ள இவர், வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
Yuvan Shankar Raja
ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கத்திலும் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர் யுவன் ஷங்கர் ராஜா. இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
மேலும் தற்போது தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 14-ஆம் தேதி 'விசில் போடு' என்கிற முதல் சிங்கிள் பாடல் தளபதி விஜயின் குரலில் வெளியானது. இந்த பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதி இருந்தார்.
இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்நிலையில் இன்று திடீர் என, யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீக்கிய தகவல் வெளியானதும், 'விசில் போடு' பாடலுக்கு சரியாக யுவன் இசையமைக்கவில்லை என்று எழுந்த சர்ச்சையால் தான் அவர் வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது.
yuvan shankar raja
ஆனால் உண்மையில் என்ன காரணம் என்பது குறித்து, யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது டெக்னீக்கள் பிரச்சனை காரணமாகவே... இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதை சரி செய்ய தன்னுடைய குழுவினர் முயன்று வருவதாக கூறி இருந்தார். இதை தொடர்ந்தே ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.