கோயிலில் தூங்கிய 85 வயது கிழவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர வாலிபர்கள்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னை கோயில் வளாகத்தில் தூங்கி கொண்டிருந்த 85 வயது மூதாட்டிக்கு குடிபோதையில் 5 வாலிபர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sexual harassment
சென்னை பாண்டிபஜார் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் 85 வயது மூதாட்டி தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். வழக்கம் போல கடந்த 4ம் தேதி அம்மன் கோயில் அருகே படுத்திருந்தார். அப்போது தி.நகரில் ஓட்டல் ஒன்றில் பணியாற்றும் ரமேஷ்(25), ராமராஜம்(31) உள்ளிட்ட 5 பேர் குடிபோதையில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.
Old woman
இதனையடுத்து மூதாட்டி அலறியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு, மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ரமேஷ், ராமராஜம் ஆகியோரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். ஆனால், இருவரில் ஒருவர் அங்கிருந்து தப்பித்துவிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டிபஜார் போலீசார் காயமடைந்த ரமேஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: Virudhunagar Murder: எங்க அம்மாவையே கிண்டல் பண்றியா? ஆத்திரத்தில் கேலி செய்தவனை காலி செய்த மகன்!
Police investigation
பின்னர் சம்பவம் குறித்து மூதாட்டி தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டிக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்த 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.