வீட்ல யாரும் இல்ல.. உல்லாசமா இருக்கலாம் வர்றியா! இளம்பெண்ணை நம்பி சென்ற இன்ஜினியர்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
சென்னையில் காதலிப்பதாக கூறி உல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்ணை நம்பி ஆசை ஆசையாய் சென்ற என்ஜினீயருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
Young Women
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (37). ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சமூகவலைதளம் மூலம் இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் விக்னேஸ்வரனை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் காதல் கோட்டை சினிமா பாணியில் முகத்தை பார்க்காமல் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர்.
Engineer
இந்நிலையில் நேற்று பகலில் அந்த இளம்பெண் விக்னேஸ்வரனை செல்போனில் தொடர்புகொண்டு வீட்டில் தான் தனியாக இருப்பதாகவும் கூறி வீட்டுக்கு அழைத்துள்ளார். இதனை உண்மை என்று நம்பி ஆசை ஆசையாய் விக்னேஸ்வரன் இளம்பெண் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டில் இளம்பெண்ணுடன் 2 ஆண்கள் இருப்பதை கண்டு விக்னேஸ்வரன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் விக்னேஸ்வரனை அடித்து உதைத்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். மேலும் வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே மூலம் ரூ.25,000 பறித்தனர்.
MGR Nagar Police Station
மேலும் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். விக்னேஸ்வரன் வீட்டுக்கு சென்று அந்த பணத்தை 'கூகுள் பே' மூலம் அனுப்புவதாக சொன்னார். அதை நம்பி விக்னேஸ்வரனை விடுவித்தனர். ஆனால் அவர் நேரடியாக எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.
women arrested
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த வீட்டில் இருந்த இளம்பெண்ணையும் அவருடன் இருந்த இரண்டு ஆண்களையும் போலீசார் கைது செய்தனர். இதுபோல காதல் நாடகமாடி வேறு யாரையாவது ஏமாற்றியுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.