நடு இரவில் திடீரென மாயமான மனைவி! ஆண் நண்பர்களுடன் மதுவிருந்து, உல்லாசம்! நேரில் பார்த்த ஃபாரின் ரிட்டன் கணவன்!
வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து கொடுத்த பணத்தை ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்துவிட்டு ஓவராக ஆட்டம் போட்ட மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல்(42). இவரது மனைவி சரஸ்வதி. இருவருக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பழனிவேல் கடந்த 10 ஆண்டுகளாக குவைத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த நபருடன் சரஸ்வதிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் கணவர் கஷ்டப்பட்டு குடும்பத்திற்கு அனுப்பி வைத்த பணத்தை மனைவி சரஸ்வதி ஆண் நண்பருடன் சேர்ந்து மது அருந்தி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் பழனிவேல் குவைத்தில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனிவேல் சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று தம்பதி இருவரும் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பழனிவேல் கண்விழித்து பார்த்த போது படுக்கை அறையில் இருந்த மனைவியை காணவில்லை, இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் மனைவி தேடிய போது மாட்டுக் கொட்டகையில் சரஸ்வதி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபடி நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- கள்ளக்காதலை கண்டித்த மனைவி.. பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கொலை.. கணவர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
இதனால் கடும் ஆத்திரமடைந்த பழனிவேல் மற்றவர் அங்கிருந்து தப்பித்த நிலையில் மனைவி சரஸ்வதியை மட்டும் ஓட ஓட விரட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் அலறிய படி சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சரஸ்வதி உயிரிழந்து கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க;- ஆசைவார்த்தை கூறி உல்லாசம்.! மனைவி, மச்சினிச்சியை ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய இளைஞர்..!
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரஸ்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை அடித்து கொலை செய்த கணவன் பழனிவேலை போலீசார் கைது செய்தனர்.