கள்ளக்காதலை கண்டித்த மனைவி.. பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கொலை.. கணவர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
கள்ளக்காதலை கண்டித்த மனைவியை ஆத்திரத்தில் விஷ ஊசி போட்டு கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மூடிகெரே தேவ்விருந்தா கிராமத்தை சேர்ந்தவர்கள் தர்ஷன்(33). தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னிஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி ஸ்வேதா (31). இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஸ்வேதா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். ஆனால், மனைவி மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கணவர் கூறிவந்துள்ளார். மனைவி உடலை அவசரம், அவசரமாக அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஸ்வேதாவின் குடும்பத்தினர் கோணிபீடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஸ்வேதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ஸ்வேதாவின் உடலில் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது. பின்னர், கணவரிடம் போலீசார் விசாரிக்கும் பாணியில் விசாரித்த போது கொலை செய்தததை ஒப்புக்கொண்டார்.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் எனக்கும், பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. கள்ளக்காதலை அறிந்த மனைவி கள்ளக்காதலை கைவிடும்படி கூறி கண்டை போட்டு வந்துள்ளார். அவர் உயிருடன் இருக்கும் வரை கள்ளக்காதலை தொடர முடியாது என்று நினைத்து விஷ ஊசி போட்டு கொலை செய்தேன் என தெரிவித்தார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.